tamilnadu

img

“ஒன்றிய ஆட்சியை மாற்றியாக வேண்டும்”

சென்னை, ஆக. 28 - திமுக தலைவர் பொறுப் பை ஏற்று 5 ஆண்டுகள் முடிந்து, 6-ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின், தமது கட்சித் தொண்டர்களு க்கு கடிதம் எழுதியுள்ளார்.  “ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால்தான், நமது மாநிலத்திற்குரிய நிதி  ஒதுக்கீடு முறையாகக் கிடை க்கும். முழுமையான வெளிச்சம் பரவும். தமிழ கத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த ‘இந்தியா’ கூட்ட ணி உருவாக்கப்பட்டுள்ளது. ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது. அந்த இந்தியா (கூட்டணி)-தான் இந்தியாவுக்கு விடி யலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளு மன்றத் தேர்தலில் திகழும். இந்தியா-வின் வெற்றி முழுமையடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.