சென்னை, பிப்.13 - தமிழகத்தில் 10 ஆண்டுக ளாக ஆட்சியில் இருந்த போது மக்கள் நலத்திட்டங் களை அதிமுக செயல்படுத்த வில்லை. தற்போதைய மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறது? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பினார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் களாக சென்னை மாநகராட்சி 123ஆவது வட்டத்தில் எம்.சரஸ்வதியும், தாம்பரம் மாந கராட்சி 61ஆவது வட்டத்தில் ஆர்.விஜயாவும் போட்டி யிடுகின்றனர். இவர்களுக்கு வாக்கு கேட்டு சனிக்கிழமை யன்று (பிப்.12) கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: நாடாளுமன்ற, சட்ட மன்றத் தேர்தலை போன்றே, மாநகராட்சி தேர்தலும் முக்கியமானது. தெரு, வீடு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவையாக உள்ளாட்சிகள் உள்ளன. தெருக்கள் தூய்மையாக இல்லாமல் போனதற்கு மக்கள் காரணமல்ல. அரசுக ளின்அடிப்படையான கொள்கையும், நிதியும் மக்களுக்கு சாதகமாக மாறும் வரை நமது போராட் டம் தொடரும். நாட்டை நாசமாக்கும் பாஜகவும், அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்ட ணியாக இல்லை. ஆனால், தேசிய அளவில் கூட்டணி தொடர்கிறது. தமிழகத்திற் கான நிதியை தராமல் வஞ்சிக்கும் பாஜகவுடன் அதிமுக உறவு வைத் துள்ளது. வாழ்வாதார பிரச்சனைக ளுக்காக மக்கள் ஒன்று சேரக் கூடாது என்பதற்காக சாதி, மதத்தை வைத்து பாஜக பிரச்சனையை உரு வாக்குகிறது.
மாநிலத்திற் கான நிதி வரவு அதிகரித்து, மாநில அதிகாரங்களை பாது காத்தால்தான் உள்ளாட்சி கள் வலுப்பெறும். ஆனால் பாஜக, தமிழகத்திற்கான நிதி பங்கை அளிக்காமல், மாநில உரிமைகளை பறித்து வருகிறது. இந்த பின் புலத்தை புரிந்து பாஜக, அதிமுகவை மக்கள் புறக் கணிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மக்கள் நலன் சார்ந்து மன்றத்திலும், களத்திலும் வாதாடுவார்கள்; போராடுவார்கள். ஆகவே மாநகராட்சிகள் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண் டும். இவ்வாறு அவர் பேசி னார். இந்த பிரச்சாரத்தில் கட்சி யின் தென்சென்னை மாவட் டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் மற்றும் கூட்டணி கட்சித் தலை வர்கள் கலந்து கொண்டனர்.