tamilnadu

img

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ இரண்டு லட்சமாவது மையம் தொடக்கம்

திருவண்ணாமலை, ஜூலை 8-  ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை திருவண்ணாமலை அருகே தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கிராமப்புறங்களில் வசிக்கும் மாண வர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடிக்கல்வி என்னும் சிறப்பு திட்டத்தை கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,99,999 மையங்கள் தொடங்கப் ப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று (ஜூலை 8) திருவண்ணா மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இரண்டு லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இவ்விழாவில், அமைச்சர்கள் எ.வ. வேலு,  செஞ்சி கே.எஸ். மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மக்களவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பி னர் எஸ். அம்பேத்குமார், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், திருவண்ணா மலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பக வத், உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதி நிதிகள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.