தூத்துக்குடி, ஜூன் 21 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றுவ தற்கான ஆயத்த பணிகள் தொ டங்கியுள்ளதாக சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மாசு ஏற் படும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராட்டங்க ளை நடத்தி வந்தனர். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 2018- ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தங்கள் குழந்தைக ளுடன் குடும்பம் குடும்பமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி ற்கு மனு அளிக்க சென்றனர். அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில், 15 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது. இதை எதிர்த்து வேதா ந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இத னிடையே, ஸ்டெர்லைட் ஆலை யை பராமரிக்கவும் ஜிப்சம் உள் ளிட்டப் பொருள்களை எடுக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. கழிவுகள் அகற்றப்படா விட்டால் உபகரணங்கள் பாதிக் கப்படும் என ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. எனினும், இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது . இந்த நிலை யில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய் துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அரசு அகற்றி னாலும் அதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 14 வகை யான அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சல்பூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், பெட் ரோலிய வாயு, ஹைஸ்பீட் டீசல், பர்னஸ் ஆயில், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உட்பட 14 வகையான வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகள் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணி களை மேற்கொள்ள துணை ஆட்சி யர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவர் துணை ஆட்சி யர் கெளரவ் குமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர் சரவணன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன், தீயணைப்புத் துறை அதிகாரி ராஜ், தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர் ரங்கநாதன், ஒட்டப்பிடாரம் பஞ்சா யத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விஸ்வநாதன், தொழில் நுட்ப அதிகாரி சரவணன் ஆகியோர் இன்று ஜூன் 21 ஆம் தேதி காலை ஆலையின் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மற்றும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.
சார் ஆட்சியர்
பின்னர், சார்ஆட்சியர் கௌரவ குமார் செய்தியாளர்களிடம் கூறுகை யில்: ஸ்டெர்லைட் ஆலை உள்ளே யும், வெளியேயும் சிசிடிவி கேமராக் கள் அமைக்கப்பட்டுக் கண்கா ணிக்கப்படுகிறது. தற்போது ஆலையில் உள்ள ஜிப்சத்தை உடைக்கும் பணி துவங்கியுள்ளது. கழிவுகள் இன்னும் இரண்டு நாள் கழித்து வெள்ளிக்கிழமை முதல் அகற்றப்பட்டு தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் பசுமை வளையத்தைப் பராமரிக் கும் பணியும் இன்று துவங்கி யுள்ளது என்றார்.