tamilnadu

img

எங்களை வெளியேற்ற முயற்சி: வக்பு வாரியம் மீது புகார்

கடலூர்,டிச.5- சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை, பூதகேணி ஆகிய பகுதிகளில் வக்பு வாரிய இடத்தில்  வசிப்பதாக தெரிவித்து 300 பேரை  வெளியேற்ற நடக்கும் முயற்சியை கண்டித்து சுமார் 300-க்கும் மேற்பட்ட  அப்பகுதி மக்கள் திங்களன்று (டிச.5)  காலை 11 மணிக்கு சிதம்பரம் உதவி  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு, உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமனிடம் மனு அளித்தனர். இது குறித்து அந்த மக்கள் கூறு கையில், “நாங்கள் சுமார் 50 ஆண்டு களுக்கு முன்பு அப்பகுதிகளில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். வங்கிக் கடன் உள்ளிட்ட பல வகை கடன்களை வீட்டில் மீது பெற்று கட்டி வருகிறோம். இந்த நிலையில், நாங்கள் 300-க்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் பள்ளிப்படை மற்றும் பூதகேணி பகுதி இடங்கள் வக்பு போர்டுக்கு சொந்தமானது எனக் கூறி வக்பு போர்டு நிர்வாகம் எங்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது”என்றனர். இடத்தை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என்று வக்பு போர்டு நிர்வாகம் கெடுபிடி செய்து வருகிறது. எங்களிடம் உள்ள பட்டா, பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம், எங்கள் பெயரில் வாங்கி உள்ள மின் இணைப்பு ரசீது ஆகிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. நாங்கள் குடியிருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமான இடம் என்றும் தெரிவித்தனர்.