tamilnadu

img

மாமேதை காரல் மார்க்ஸின் 205 ஆவது பிறந்த தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மரியாதை

மாமேதை காரல் மார்க்ஸின் 205 ஆவது பிறந்த தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருடைய படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், ஆர்.சுதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (வலது) மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் உள்ள மார்க்ஸ் சிலைக்கு தீக்கதிர் ஊழியர்கள் மலர்தூவி  மரியாதை செலுத்தினர்.