விருதுநகர், மே.17- விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்க ளாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், விருதுநகரில் புதனன்று மாலை திடீரென பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது பல்வேறு சாலைகளில் இருந்த மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. இந்நிலையில், விருதுநகர்-மதுரை 4 வழிச் சாலை யோரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது, அருகில் உள்ள மின் கம்பியில் மரம் சாய்ந்தது. இதனால், அப்பகுதி யில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்பு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் உடைந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து சுமார் ஒரு மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது.