tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவல்துறை  நீதித்துறை சார்பில்  மரம் நடும் விழா

திருத்துறைப்பூண்டி, ஏப்.18-ந  திருவாரூர் மாவட்ட காவல்துறை, நீதித்துறை சார்பில் மரம் நடு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.  நிகழ்வில் மாவட்ட முதன்மை நீதிபதி பி. செல்வமுத்துக்குமாரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் வி. மோகனசந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட், மகிளா நீதிமன்ற நீதிபதி ஜி. சரத்ராஜ், திருவாரூர் நீதிமன்ற நடுவர் விஜய் ஆனந்த், மாவட்ட சிவில் நீதிபதி  எம். மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டுவைத்து, விழாவை சிறப்பித்தனர்.  இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், நீதித்துறையின் சமூக பொறுப்பை ஒளிர வைத்த ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

விளையாட்டு விழா

துக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த, இராஜேந்திரபுரம் நைனா முகமது கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்கு கல்லூரி நிறுவனர் தாளாளர் நை. முகம்மது பாருக் தலைமை வகித்தார். வருங்கால அறக்கட்டளை உறுப்பினர்கள் அப்துல் நாசர், அப்துல் பாரி, அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மாணவி யாஸ்மினுக்கு கோப்பை வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர் சி. திருச்செல்வம் வாழ்த்திப் பேசினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சீனிவாசன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில், மாணவரின் பெற்றோர்கள் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்லூரி மேலாளர் மாரிச்சாமி, பெஞ்சமின் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆங்கிலத்துறை தலைவர் குமரன் வரவேற்று பேசினார். கணிதத்துறை உதவி பேராசிரியர் அகிலா நன்றி கூறினார்.

தியாகி களப்பால் குப்புவின்  77 ஆவது நினைவு தினம்

தியாகி களப்பால் குப்புவின் 77 ஆவது நினைவு தினத்தில், களப்பால் கிராமத்தில்  மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், களப்பால் குப்புவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் தியாகி களப்பால் குப்புவின் புதல்வர்கள் ஏ.கே. கணேசன், ஏ.கே. சிவஞானம், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. தமிழ்மணி, கே.ஜி. ரகுராமன், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.