tamilnadu

img

சுழற்சிமுறை பணி வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 29- தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகங்க ளில் பணிபுரியும் தொழில்நுட்பம் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு மற்ற கழகங்களைப்போல் இரண்டிரண்டு நாள் சுழல் முறை பணி வழங்க வேண்டும், 18 ஆம்தேதியிலிருந்து பணிக்கு வர இயலாதவர்க ளுக்கும், பணிக்கு வந்து இடையிடையே வர இயலாதவர்களுக்கும் சிறப்பு விடுப்பு தருவதுடன், சொந்த விடுப்பை கழிக்கக்கூடாது, தொழில்நுட்ப ஊழியர்களை சாக்கடை அள்ள சொன்ன நாகர்கோவில் கிளை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவுப் போக்குவரத்து கழக அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் அனைத்து பணிமனைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதையொட்டி நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவுபோக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க பணிமனை செயலாளர் டி.எஸ்.ஜாண் ராஜன், தொமுச மாநில துணை தலைவர் தங்கச்செழியன் ஆகியோர் தலைமை வகித்த னர். தொமுச பொதுச்செயலாளர் பீ.பாரூக், சிஐடியு பணிமனை தலைவர் பகவதியப்பன் ஆகியோர் பேசினர்.  இதில் அரசு விரைவுபோக்குவரத்து கழக பணிமனை அனைத்து சங்க தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.