சென்னை, மார்ச் 19 - பொது வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்பார்கள் என்று தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., தெரிவித்தார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்விரோத கொள்கை களை கண்டித்து மார்ச் 28-29 தேதி களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், முறைசாரா தொழி லாளர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்டு அனைத்துத் தரப்பு தொழி லாளர்களும் கலந்து கொள் கின்றனர். இதனையொட்டி தொழில் வாரியாக அனைத்து சங்க கூட்ட மைப்பு சார்பில் ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச் 19) சென்னையில் ஆயத்த மாநாடு நடைபெற்றது.
வாயிற்கூட்டம்
இந்த மாநாட்டில் செய்தியாளர்க ளிடம் எம்.சண்முகம் எம்.பி., கூறு கையில், “விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தற்போ துள்ள வேலைகளை பாதுகாப்ப தோடு, புதிய வேலைகளை உரு வாக்க வேண்டும், பொதுத் துறைகளை தனியார்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில், போக்குவரத்து தொழிலா ளர்கள் மட்டுமன்றி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டு அனை த்து தரப்பு தொழிலாளர்களும் பங் கேற்பார்கள்” என்றார். வேலைநிறுத்தத்தை விளக்கி மார்ச் 23, 23, 24 தேதிகளில் வாயிற்கூட் டங்கள் நடத்தவும், வேலைநிறுத்தத் தில் முழுமையாக பங்கேற்பது என்றும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டிற்கு தொமுச பொருளாளர் கி.நடராசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் மற்றும் ஆறுமுகம் (ஏஐடி யுசி), அந்திரிதாஸ் (எம்எல்எப்), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), நாராயணசாமி (ஐஎன்டியுசி), நட ராஜன் (டிடிஎஸ்எப்), அர்ச்சகர் (ஏஏஎல்எல்எப்), மோகன் (டிட பிள்யுயு) உள்ளிட்டோர் பேசினர்.