தருமபுரி, ஜூன் 11- தருமபுரி மாவட்டம், ஒகேனக்க லில் கடந்த இரண்டு மாதங்களாக கோடைகால சீசன் கலைக் கட்டியது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) கோடை விடுமுறையின் இறுதி நாள் என்பதாலும் வார விடுமுறை நாள் என்பதாலும் ஏராள மான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள் ளதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. ஒகேனக்க லில் பரிசல் பயணத்திற்கு கடந்த மாதம் வரை ரூ.750 மட்டுமே கட்டணமாக வசூ லிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1,500 ஆக கட்டணம் உயர்த்தப் பட்டது. இருப்பினும் கட்டண உயர்வை யும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டனர்.