tamilnadu

img

குற்றவாளிக் கூண்டில் பாஜகவினர் ஆரூத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுக!

சென்னை, மார்ச் 25- ஆரூத்ரா நிதிநிறுவன மோசடி யில் பாஜகவினர் சிக்கியுள்ளனர். இவ்வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றி, குற்றவாளிகள் அனை வரையும் தமிழக அரசு கைது செய்ய  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆரூத்ரா என்கிற நிதி நிறு வனம் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 2400  கோடிக்கும் அதிகமாக பணம் வசூ லித்து முறைகேடு நடைபெற்றிருக்கி றது. தற்போது அதில் முக்கிய குற்ற வாளி ஒருவர் கைது செய்யப்பட்டி ருக்கிறார். இந்த வழக்கில் தொடர்பு டைய அனைவரையும் விரைவில் கைது செய்து உரிய தண்டனை வழங்க ஏற்பாடு செய்வதோடு, சொத்துக் களை மீட்டு பணத்தை இழந்து பாதிக்  கப்பட்ட மக்களுக்கு வழங்கிட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தமிழ்நாடு அரசையும், மாநில காவல் துறையையும் வலியுறுத்துகிறது.

ஆரூத்ரா மற்றும் ஐ.எப்.எஸ். நிதி  நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி களுக்கு நிதிமுறைகேடு செய்துள்ள தாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிறுவனங்களில் உள்ள பாஜகவினர் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட் டங்களில் உள்ள பல பன்னாட்டு, உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் உதவியோடும், வங்கி அதிகாரிகளின் உதவியோடும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல  ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப் பட்டு, அத்தொகை மேற்கண்ட நிறு வனங்களில் மூலதனம் செய்யப்பட் டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம்  பல்லாயிரக்கணக்கான  தொழிலாளர் கள் மூலதனத்தையும் இழந்து வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் கையறு நிலையில் தவித்துக் கொண்  டுள்ளனர். இத்தகைய பூதாகரமான மோசடிகளை மேற்கொள்வதற்கு பாஜகவினர் தங்களது அரசியல் செல்  வாக்கை தெளிவாக பயன்படுத்தி யுள்ளதை அறிய முடிகிறது. கடந்த 2019 இல் நடைபெற்ற நாடா ளுமன்ற தேர்தலையொட்டியும், அதற்கு முன்பாகவும் பல்வேறு சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்ட நபர்களும், மோசடிப்பேர்வழிகளும் பாஜகவில் இணைந்தனர். இந்த வழக்  கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஹரிஸ்  என்பவரும் பாஜகவில் இணைந்து,  உடனேயே பாஜக மாநில விளை யாட்டுப் பிரிவின் செயலாளராக நிய மிக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்களி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வும், தன்னோடு குற்றம்சாட்டப்பட்ட வர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல  பாஜகவில் தான்பெற்ற பதவியை பயன்படுத்தியும், குற்றச்செயல்களில் ஹரிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நோக்கங்களுக்காகவே அவர் பாஜகவில் இணைந்ததாகவும், இதை தெரிந்தே பாஜக இவரை கட்சியில் இணைத்துக் கொண்டதாகவும் அதற்காக ஹரிஸ் அந்த கட்சிக்கு பல  கோடி ரூபாய் பணம் உதவி செய்ததாக வும் பல்வேறு தகவல்கள் உலவு கின்றன.

பணமோசடிப் பேர்வழிகள், சமூக  விரோத குற்றச் செயல்களில் ஈடுபடு வோர் பாஜகவில் இணைவதும் இத்த கைய பேர்வழிகளை வழக்குகளிலி ருந்து தப்புவிப்பதற்காக பாஜக அவர் களோடு பேரம் பேசி இணைத்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.  சமீப காலங்களில் 8 கொலை, 11 கொலை முயற்சி, 48 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை  குணா, 6 படுகொலைகள், 6 முறை  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட  பிரபல ரவுடி வடசென்னை கல்வெட்டு  ரவி, 5 முறை குண்டர் சட்டத்தில் கைது  செய்யப்பட்ட ரவுடி சேலம் முரளி, கொலை உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல  கஞ்சா வியாபாரி புளியந்தோப்பு அஞ்  சலை, ரவுடி சீர்காழி ஆனந்த் என்று  ஒவ்வொரு மாவட்டத்திலும், கொலைக் குற்றவாளிகளும், சமூக விரோதிகளும், கஞ்சா பேர்வழிகளும், நிதி மோசடி பேர்வழிகளும் பாஜக வில் இணைந்துள்ளனர். இது ஒரு  மிகப்பெரிய சதியாகவே கருத வேண்டியுள்ளது.  எனவே, ஆரூத்ரா  நிதி நிறுவன மோசடி குற்றத்தில் சாதா ரண ஏழை, எளிய மக்களிடம் ரூ. 2400  கோடி பணத்தை அபகரித்துக் கொண்ட கும்பலின் முக்கிய குற்ற வாளியை தங்கள் கட்சியில் பாஜக இணைத்து பொறுப்பு வழங்கியது இதன் தொடர்ச்சியே தவிர தற்செய லான நிகழ்வல்ல.

எனவே, இப்பெரும் நிதிமோசடி கள் குறித்து விரிவான விசாரணை யை மேற்கொள்ள இவ்வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டுமெனவும், மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும் தமி ழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் இவ்  வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு பாஜகவின் நிர்வாகிகளையும் விசா ரிக்க வேண்டுமெனவும், குற்றவாளி களை தப்புவிக்கவும், மோசடி பணத்தை அபகரிக்கவும் பாஜக நிர்வாகிகள் உதவியிருக்கிறார்களா? அதற்கு கைமாறு பெற்றிருக்கிறார்களா? அதற்  காக அதிகாரிகளிடம் ஆளுங்கட்சி  என்பதை பயன்படுத்தி சட்டத்தை  வளைக்க நிர்ப்பந்தித்திருக்கிறார் களா? கைமாறாக என்ன பெற்றார்  கள்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தோர் அனைவரை யும் தண்டிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்  குழு தமிழ்நாடு அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

;