6 மாதத்துக்கு பிறகு மீண்டும் கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி
திருநெல்வேலி, மே 19-கூடங்குளம் முதலாவது அணு உலையில் 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன், தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள்அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதலாவது அணு உலையில் கட்டுமானபணிகள் முடிந்து, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்துமின்உற்பத்தி தொடங்கப்பட்டது.பின்னர் அந்த அணு உலையில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவு முதல்வணிக ரீதியிலான மின்உற்பத்தி தொடங்கி, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இதேபோன்று கூடங்குளம் 2-வது அணு உலையில் கடந்த 2016-ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வணிக ரீதியிலானமின்உற்பத்தி தொடங்கியது.இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி வருடாந்திரபராமரிப்பு பணிக்காகவும், எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும், முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து அந்த அணு உலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து, பல்வேறுகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, 180 நாட்களுக்கு பிறகு. தற்போது மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது முதலாவது அணு உலையில் 380 மெகாவாட் மின்உற்பத்திசெய்யப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் மின் உற்பத்தி படிப்படியாகஅதிகரித்து, முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்திஇலக்கை அடையும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.கூடங்குளம் 2ஆவது தற்போது 575 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில்பட்டி ஹாக்கி போட்டி
சென்னை, மும்பை, செகந்தராபாத் அணிகள் வெற்றி
தூத்துக்குடி, மே 19-கோவில்பட்டி, கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின்சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ்அகாடமியுடன் இணைந்து நடத்தும் பதினொன்றாம் ஆண்டுலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப்போட்டிகள் மே 16ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான சனியன்று மாலை நடைபெற்ற7வது லீக் ஆட்டத்தில்; செகந்தராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் சென்னை ஐசிஎப் அணி மோதியது.20-வது நிமிடத்தில் செகந்தராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி வீரர்ஷிஷி கௌடா பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 28-வது நிமிடத்தில்செகந்தராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி வீரர் சந்தீப் குமார் சிங்ஒரு பீல்டு கோல் போட்டார். 31-வது நிமிடத்தில் சென்னைஐ.சி.எப் அணி வீரர்சஞ்சய் ஷால்ஷோ ஒரு பீல்டு கோல் போட்டார்.51-வது நிமிடத்தில் செகந்தராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி வீரர் ஷிஷி கௌடா ஒரு பீல்டு கோல் போட்டார். 60-வது நிமிடத்தில்சென்னை ஐ.சி.எப் அணி வீரர் ஷியாம்குமார் ஒரு பீல்டு கோல்போட்டார். இதில் 3:2 என்ற கோல் கணக்கில் செகந்தராபாத் சவுத் சென்ட்ரல்ரயில்வே அணி வெற்றி பெற்றது. 8வது லீக் ஆட்டத்தில் சென்னை தெற்கு இரயில்வே அணியுடன்கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடெமிஅணி மாலை 6.30 மணியளவில் மோதியது.2-வது நிமிடத்தில்சென்னை தெற்கு இரயில்வே அணி வீரர் மகேந்திரன் பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 24-வது நிமிடத்தில் சென்னைதெற்கு இரயில்வே அணி வீரர் நம்பி ஹண்டா பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 28-வது நிமிடத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணி வீரர் மகேந்திரன் பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 47-வது நிமிடத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணி வீரர் கார்த்தி ஒரு பீல்டு கோல் போட்டார். 48-வது நிமிடத்தில் சென்னை தெற்கு இரயில்வே அணி வீரர்; செல்வராஜ் ஒரு பீல்டு கோல் போட்டார். 56-வது நிமிடத்தில் சென்னை தெற்கு இரயில்வே அணி வீரர் ரகுராம் ஒரு பீல்டு கோல் போட்டார். இதில்; 6:0 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு இரயில்வே அணி வெற்றி பெற்றது9வது லீக் ஆட்டத்தில் மும்பை ஆல் இந்தியா கஸ்டமஸ்& ஜிஎஸ்டிஅணியுடன் சென்னை இந்தியன் வங்கி அணி இரவு 8.30 மணியளவில் மோதியது.3-வது நிமிடத்தில் ஆல் இந்தியா கஸ்டமஸ்& ஜிஎஸ்டி அணி வீரர் மோசஸ் புலன்தாரா ஒரு பீல்டு கோல் போட்டார்.10-வது நிமிடத்தில் சென்னை இந்தியன் வங்கி அணி வீரர் ஹரீஷ் எஸ்முதாகர் ஒரு பீல்டு கோல் போட்டார். 49-வது நிமிடத்தில் ஆல் இந்தியாகஸ்டம்ஸ் & ஜிஎஸ்டி அணி வீரர் திம்மன்னா பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 52-வது நிமிடத்தில் ஆல் இந்தியா கஸ்டம்ஸ் & ஜிஎஸ்டி அணி வீரர் விஷால் சிங் ஒரு பீல்டு கோல் போட்டார். 59-வது நிமிடத்தில் சென்னை இந்தியன் வங்கி அணி வீரர்சோமனா பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். இதில் 3 : 2 என்ற கோல் கணக்கில் ஆல் இந்தியா கஸ்டம்;ஸ் & ஜிஎஸ்டிஅணி வெற்றிப் பெற்றது.