குலசேகரம், ஜூன் 13 - குளிர்சாதன வசதியுடன் சீர்மிகு வகுப்பறை கொண்டதாக செயல்படுகிறது திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளி .அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் உதவியுடன் பள்ளியின் கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரு கின்றன. கடந்தாண்டு முன்னாள் மாணவர் மோகன்தாஸ் வழங்கிய நன்கொடையில் புதிய பள்ளி கட்டடங்கள், பாதுகாப்பான சுற்றுச்சூழல் கொண்டதாக பள்ளி வளாகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியருடன் மேலும் மூன்று ஆசி ரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் இரண்டு ஆசிரியர்கள், ஒரு துப்புரவு பணி யாளர் என வலுவான கட்டமைப்பு வசதி செய்யப் பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டு மாண வர் சேர்க்கையை விட இந்த ஆண்டு எண்ணிக்கை குறையும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் திகழ்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அரசின் உதவிகள் உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் இல்லை என்பதை சுட்டிக் காட்டு கின்றனர் சமூக ஆர்வலர்கள். சாதாரண கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் குடும்பங் களில் கூட பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு அனுப்பும் மோகம் நீடிக்கிறது. திருந்திக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 20 மாணவர்கள் பொது தேர்வு எழுதியதில் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிக பட்ச மதிப்பெண் 403. இந்த பள்ளியில் நிரந்தர தலைமை ஆசிரியர் இல்லாதது மாணவர்களின் படிப்பை பாதித்துள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர். உயர்நிலைப் பள்ளியோடு ஒப்பிட்டு தொடக்கப் பள்ளியையும் பொதுமக்கள் பார்ப்ப தால் தங்கள் பிள்ளைகளை அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரி யர் நியமிப்பதுடன் தொடக்கப் பள்ளி அளவுக்கு தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.