tamilnadu

img

போக்குவரத்துத் தொழிலாளர்கள் சிறைநிரப்பும் போராட்டம்

சென்னை, ஜன. 22 - போக்குவரத்துக் கழகத்தின் நட்டத்தை ஈடுகட்டக் கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னம் (சிஐடியு) புதனன்று (ஜன.22) தமிழகம் முழுவதும் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்தியது. இதில், போக்குவரத்து ஊழியர்கள் - ஓய்வூதியர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைதாகினர். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தி யாசத் தொகையை மாநில அரசு வழங்க வேண்டும்; கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பது டன், மறைமுகமாக தனியார்மயம், ஒப்பந்தமுறை நியமனத்தை கைவிட வேண்டும்; ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வுகால பலன் வழங்க வேண்டும்; 10 வரு டங்களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீட்டை வழங்க வேண்டும்; தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலிப்பணியிடங்களைப் நிரப்ப வேண்டும்; வாரிசு வேலை வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்தத்தைப் விரைந்து பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 24 மையங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர். துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார் தொடங்கி வைத்தார். சம்மேளன பொருளாளர் சசிக்குமார், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செய லாளர் பா. பாலகிருஷ்ணன், சங்கத்தின் பொதுச்செயலாளர் வி. தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர். பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றுக் கைதாகினர்.

ரூ. 45 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும்!

கே. ஆறுமுக நயினார் பேட்டி

இந்த மறியல் போராட்டத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார், “அரசுப் பேருந்துகளை தினசரி 2 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்; சேவைத்துறை என்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நட்டம் ஏற்பட்டாலும் பேருந்து இயக்கப்படுகிறது; எனவே, இதில் ஏற்படும் இழப்பை அரசு தான் ஈடுகட்ட வேண்டும்; மறுபுறத்தில், போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் 30 ஆயிரம் கோடி ரூபாயைக் கடன் வாங்கியும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்திலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபா யையும் எடுத்து செலவிட்டுள்ளது; அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய இந்த 45 ஆயிரம் கோடி ரூபாய், இதுவரை வழங்கப் படாத நிலையில், அதனை உடனடியாக வழங்க வேண்டும்” என்றார். வேலைநிறுத்தத்திற்குத் தள்ள வேண்டாம் மேலும் பேசிய அவர், “2017-ஆம் ஆண்டு 22 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 18 ஆயிரத்து 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன; ஆண்டுக்கு 10 விழுக்காடு பேருந்துகளை உயர்த்துவதற்கு மாறாக, 4 ஆயிரம் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன; 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன; அந்த இடங்களை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டு, மறைமுக தனியார்மய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவற்றை அரசு கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒன்றரை ஆண்டுகளாக 3500 கோடி ரூபாய், ஓய்வுக்காலப் பலன்களை அரசு வழங்காமல் உள்ளது; ஓய்வுபெற்றோருக்கு அகவிலைப்படி மறுக்கப்பட்டு வருகிறது; வாரிசு வேலை வழங்கப்படவில்லை; ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையையும் அரசு நடத்தாமல் உள்ளது. இவற்றையெல்லாம் முன்வைத்துத்தான் மறியல் நடத்துகிறோம். அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால், அது ஊழியர்களை வேலைநிறுத்தத்தை நோக்கி தள்ளுவதாகவே அமையும்” என்றும் குறிப்பிட்டார்.