கொடியன்குளத்தில் காவல் துறையினர் நடத்திய அத்து மீறல்களையும், மிருகத்தனமான தாக்கு தல்களையும் பற்றி முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் வி.வைகுந்த் “இதய மற்ற முறையில் செய்யப்பட்ட வன்முறை” என வர்ணித்தார். தனது 30 ஆண்டு கால பணிக்காலத்தில் தனது சொந்த காவல் துறையின் பிரிவில் இத்தகைய மனித தன்மையற்ற செயல்பாட்டை தான் பார்த்த தில்லை என்றும் அவர் கூறினார். ஒரு கொடியன்குளம் மட்டுமல்ல. தலித் மக்க ளுக்கு எதிரான பல கொடியன்குளங்களை உதாரணம் காட்ட முடியும். நாலுமூலைக் கிணறு, மாஞ்சோலை போன்ற உதாரணங் கள் அத்துமீறலில் குறைவான தன்மை யுடையவை அல்ல. அந்த பட்டியலில் சங்கர லிங்கபுரம் - சல்லிசெட்டிப்பட்டி கிராமங் களில் நடைபெற்ற காவல்துறை தாக்கு தல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சாதியப் பிரச்சனைகள், விரோதங்கள் ஏற்படும்போது காவல்துறையின் அணுகு முறை பல சந்தர்ப்பங்களில் சட்டப்பூர்வ மானதாக இருப்பதில்லை. மாறாக, சமூ கத்தில் நிலவும் சாதியப் பார்வையுடனும், பகைமையுடனும் அணுகுவதை பல சந்தர்ப் பங்களில் சந்தித்துள்ளோம். அத்தகைய ஒரு கொடூரமான நிகழ்வையே இங்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள் ளோம். சங்கரலிங்கபுரம் - சல்லிசெட்டிப் பட்டி என்பவை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரே ஊராட்சியை சார்ந்த இரு கிராமங் களாகும். தூத்துக்குடியிலிருந்து இக்கிரா மங்கள் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இக்கிராமங்களில் 2001 நவம்பரில் நடை பெற்ற காவல்துறை தாக்குதல்களை இப்போது நினைத்தாலும் மனிதநேயம் உள்ள எவரும் பதறாமல் இருக்க முடியாது.
சங்கரலிங்கபுரம் கிராமத்தில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் தலித் மக்களாவர். ஏறத்தாழ இங்கு 200 தலித் குடும்பங்கள் வாழ்கின்றன. இதற்குமேல் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாதி இந்துக்களின் குடும்பங்களாகும். தலித் மக்களின் மிகப் பெருவாரியானவர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள். சாதி இந்துக்களுக்குச் சொந்தமான நிலங் களை நம்பித்தான் இவர்களின் வாழ்வா தாரம் அமைந்துள்ளது. சல்லிசெட்டிப் பட்டியிலும் பல தலித் குடும்பங்கள் வாழ் கின்றன. அவர்களின் வாழ்நிலையும் சங்கர லிங்கபுரம் தலித் மக்களின் வாழ்நிலை போன்றதுதான். சங்கரலிங்கபுரம், சல்லிசெட்டிப்பட்டி ஆகிய இரு கிராமங்களிலுமே சாதிய ஏற்றத்தாழ்வுகள் வலுவாக உள்ளன. பல தீண்டாமைக் கொடுமைகளை இவர்கள் அனுபவித்து வருகின்றனர். 20 ஆண்டு களுக்கு முன்பு சங்கரலிங்கபுரத்தில் உள்ள குளத்தை இவர்கள் பயன்படுத்த முடியாது; சாதி இந்துக்களின் தெருக்களில் இவர்கள் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாது. இந்த இரு கிராமங்களில் உள்ள தலித் மக்களில் மிகப் பெருவாரியானவர்கள் கிருத்துவ மதத்தை தழுவியுள்ளனர். சங்கரலிங்கபுரத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் உள்ளது. இக்கிராமங்களில் 2001 காவல்துறை அத்துமீறல்களுக்கு பின்னணியாக நேர்ந்த சம்பவங்கள் எவை? இக்கிராமங்களின் மக்கள் 2001 நவம்பர் 16 நடத்திய ஒரு சாலை மறியல் உடனடி காரணம் என்றா லும், இதற்கான அடிப்படைக் காரணம் அக் காலத்தில் அந்த ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்தான். இந்த ஊராட்சி ஒரு பொது தொகுதிதான். ஆனால், அத்தேர்தலில் தலித் மக்கள் தங்கள் வேட் பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்தனர்.
அவ்வூராட்சியில் இதுவரை தலை வராக இருந்தவர்கள் தலித் மக்களின் நலன் களிலும், பிரச்சனைகளிலும் அக்கறை காட்டவில்லை என்ற குறைபாடு தலித் மக்களுக்கு இருந்தது. இப்பின்னணியில் தலித் மக்களின் வேட்பாளராக சல்லிசெட்டிப்பட்டியைச் சார்ந்த விஜயன் என்பவரை நிறுத்துகின்ற னர். எதிர் வேட்பாளராக பாலகிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார். இந்த பொது தொகுதியில் தலித் வேட்பாளர் போட்டியிடு வதை சாதிய சக்திகள் விரும்பவில்லை. இச்சூழலில் இரு தரப்புக்கும் பகைமை உணர்வு ஏற்படுகிறது. தலித் வேட்பாள ருக்காக பணியாற்றிய பொன்ராஜ், ராஜூ ஆகியோர் சாதிய சக்திகளால் கடுமை யாக தாக்கப்படுகின்றனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோடு, காவல்துறைக்கும் புகார் தரப்பட் டது. இப்புகாரையொட்டி காவல்துறை யினர் பாலகிருஷ்ணனின் புதல்வர்களை கைது செய்கின்றனர். இதனால், நிலைமை உடனடியாக கட்டுக்குள் வந்தது. ஆனால், இந்நிலைமை நீடிக்கவில்லை. தேர்தல் நாளன்று நிலைமை மோசமா னது. சாதி இந்துக்களின் வேட்பாளர் பால கிருஷ்ணன் எவ்வித பிரச்சனையும் இன்றி தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் சென்று வருகிறார். ஆனால், தலித் மக்க ளின் வேட்பாளர் விஜயன் சாதி இந்துக்க ளின் பகுதியில் சென்று வரும்போது மோதல் ஏற்பட்டது. விஜயன் தாக்கப்பட் டார். இதனால், நிலைமை பதட்டமானது. ஒரு தலித் பெண் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டார். வேறொரு தலித் பிரிவைச் சார்ந்தவரும், அவரது குழந்தையும் தாக்கப்பட்டனர். தலித் மக்களின் சில வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாதிய சக்திகள் தலித் மக்களை தாக்கியது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோது அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை சாதி இந்துக்களின் தரப்பில் தலித் மக்கள் மீது புகார் அளித்தபோது அப்புகாரை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது. இப்பின்னணியில் காவல்துறை ஊருக்குள் நுழைந்தது. நுழைந்தவர்கள் நேரடியாக தலித் குடியிருப்புகளுக்குள் சென்று தலித் மக்களை தாக்கினர். முத்து என்பவர் பலத்த காயமடைந்தார். காவல்துறையின் பாரபட்சமான நடவடிக் கையை கண்டித்துத்தான் மேலே குறிப்பிட்டவாறு 2001 நவம்பர் 16ல் தலித் மக்கள் விளாத்திகுளம் - புதூர் சாலையில் 300 பேர் வரை சாலை மறியல் நடத்தினர். இந்த மறியலை காவல்துறையினர் லாவகமாக சமாளித்திருக்கலாம். மாறாக, புதூரிலிருந்து வந்த போலீஸார் தலித் மக்களின் மீது தடியடி நடத்தினர். அப்போது, முருகன் என்ற ஒரு ஸ்பெசல் பிராஞ்ச் காவலர் பேருந்திலிருந்து இறங்கி வந்து ஏற்கனவே தாக்கி கொண்டி ருந்த போலீசாருடன் சேர்ந்து தலித் மக் களை தாக்குவதில் ஈடுபட்டார். நிலைமை பதட்டமாகி கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் முருகன் என்ற காவலரும் மற்றொரு காவலரும் காயமடைந்தனர். பின்னர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் முருகன் மரணமடைந்தார். காவலர் முருகனின் மரணம் துரதிஷ்ட வசமானது. முருகன் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டு மென சிபிஐ(எம்) மாவட்டக்குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. வேறு பல ஜனநாயக இயக்கங்களும் இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டன. ஆனால், காவல்துறையினரோ தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். தலித் மக்களை சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கினர். அவ்வாறு சுற்றி வளைத்து தாக்கப்பட்டவர்களில் ஒரு மாத குழந்தை யிலிருந்து 90 வயது முதியவர் வரை இருந்த னர். இவர்களில் பலரும் கைது செய்யப் பட்டனர். ஊரிலிருந்த ஒரு பகுதி மக்கள் தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். கொட்டும் மழையிலும் வயற்காடுகளிலும், திறந்தவெளியிலும் தலித் மக்கள் இருக்க நேரிட்டது. இவ்வாறு இடம் மாறி ஓடிவிட்ட கணிசமான தலித் மக்களும் போலீசாரிடம் பின்னர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு, 150க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்து, தலித் மக்களின் வீடுகள் காவல்துறையினரால் சூறையாடப்பட்டன. மின் விசிறிகள், அலமாரிகள், கிரைண்டர் கள், தொலைக்காட்சி பெட்டிகள், டேப் ரெக்கார் டர்கள், தையல் மெஷின்கள், சைக்கிள்கள், சமையல் பாத்திரங்கள், மரச்சாமான்கள் என அனைத்தும் காவல்துறையினரால் உடைத்து நொறுக்கப்பட்டன. ஒரு சில வாரங்களில் வீடு திரும்பிய தலித் மக்கள் தங்களது வீடுகள், உடைமைகள் சேத மடைந்து சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு 2001லேயே ரூபாய் 50 லட்சம் வரை இருக்கும் என தலித் மக்கள் தெரிவித்தனர்.
அது மட்டுமல்ல, மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், வேலை வாய்ப்பு அலுவலக கார்டுகள், பட்டாக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டன. தங்களிடமிருந்த சொற்ப தங்க நகைகள், வெள்ளிச் சாமான்களையும் இதோடு சேர்த்து பறிகொடுத்தனர். தலித் மக்கள் மீதான இத்தாக்குதல் மற்றும் சூறையாட லில் முருகன் குடும்பத்தை சேர்ந்தவர் களும் ஈடுபட்டதாக காவல்துறையினர் கூறு கின்றனர். இதனை தலித் மக்கள் ஏற்க வில்லை. காவலர்களின் தாக்குதலால் தான் தாங்கள் அனைத்தையும் இழந்தோம் என புலம்பினர். தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நிராதரவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் இருந்தனர். அவர்களில் 64 பேர் பெண்கள். 15 பேர் குழந்தைகள். இவர்கள் அனைவர் மீதும் காவலர் முருகனை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. சிறையில் அவர்களின் உடல்நிலை யும், மன நிலையும் சொல்லி மாளாது. மிகுந்த துயரத்தில் இருந்த இவர்களை சிறையில் சென்று சிபிஐ(எம்) தலைவர்கள் பி.சம்பத், கே.பொன்ராஜ் உள்ளிட்ட தலை வர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர் களின் குடும்ப நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக தைரியம் அளித்தனர். இவ்வாறு, பலரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு அவர்களது குடி யிருப்புப் பகுதியில் வீடுகள், உடைமை களுக்கு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தி விட்டு சங்கரலிங்கபுரம், சல்லிசெட்டிப்பட்டி ஆகிய இரு கிராமங்களில் தலித் குடியிருப்புகளை காவல்துறை சுற்றி வளைத்துக் கொண்டது. எவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் இக்கிராமங் களுக்குள் சென்று நிலைமையை அறிய பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால், காவலர்கள் முரட்டுத்தனமாக அனுமதி மறுத்தனர். காவல்துறை நிர்வாகத்துடன் பல நாள் போராட்டங்களுக்கு பிறகே அரசியல் - ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் கிராமங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினருடன் கடும் சர்ச்சைகள் செய்து அவ்வாறு சென்றவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத். 2001 டிசம்பர் 5இல் இவருடன் பிரபல வழக்கறிஞ ரும், சிபிஐ(ம்) நெல்லை மாவட்டத் தலைவர்களில் ஒருவருமான ஆர்.கிருஷ்ணன், சிபிஐ(எம்) மாவட்ட செயலா ளர் பி.இசக்கிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பொன்ராஜ், கே.கனகராஜ், ஆர்.மல்லிகா, குமரவேல் உள்ளிட்ட தலைவர்களும் சென்றனர். சேதமடைந்த தலித் குடியிருப்புகளை கண்டு இவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மனிதத் தன்மையற்ற தாக்குதல் காவல்துறையினரால் நடத்தப்பட்டிருந்தது. வேறுபல ஜனநாயக, மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை பின்னர் சந்தித்து ஆறுதல் கூற வந்தனர். சிபிஐ(எம்) மாநிலக்குழு, மாவட்டக்குழு சார்பாக காவல்துறையை கண்டித்து கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
இச்சம்பவத்திற்கு காரணமான காவலர் களை இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்டப்பூர்வமான நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் மொத்த சம்பவங்களையும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யிலான விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டு மெனவும் இந்த அறிக்கைகள் வலியுறுத்தின. காவல் துறையின் தாக்குதலை கண்டித்து விளாத்திக்குளத்தில் சிபிஐ(எம்) சார்பாக பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்டன இயக்கங்கள் சிபிஐ(எம்) சார்பாக நடந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களும், உதவியும் வழங்கிட சிபிஐ(எம்) மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் வலுவாக திட்டமிட்டன. சிஐடியு, விவசாய சங்கம், வாலிபர், மாதர், மாணவர் ஆகிய அமைப்புகளின் சார்பாக கணிசமாக நிதி திரட்டி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஸ்பிக் தொழிலாளர்கள் சார்பாக கணிசமாக நிதி திரட்டி இம்மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டது. இப்பணியை தோழர் கனகராஜ் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இதேபோல, இன்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பாக பெருமளவு நிதி திரட்டி நிவாரணப் பொருட்களும், உணவுப் பொருட்களும் இம்மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணியை தோழர் தேவப்பிரகாஷ் நேர்த்தியாக ஒருங்கிணைத்தார். சிபிஐ(எம்) சார்பில் மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய புகாரின் பேரில் மனித உரிமை ஆணையம் வெளியிட்ட உத்தரவுப்படி பாதிக்கப் பட்ட மக்களுக்கு தமிழக அரசு ஓரளவு நிவாரணம் வழங்கியது. பல மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக இயக்கங் கள் இணைந்து சங்கரலிங்கபுரம் - சல்லிசெட்டிப்பட்டி கிராமங்களில் நடைபெற்ற காவல்துறை தாக்குதல்கள் குறித்து ஒரு பொது விசாரணையை தூத்துக்குடியில் நடத்தின. இந்த பொது விசாரணை 2001 டிசம்பர் 16,17 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. மகாராஷ்ட்ரா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ் தலைமை யில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் ஒரு அங்கமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் செயல்பட்டார். இதோடு, மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ஆர்.ரத்தினசாமி, காந்தி கிராமப்புற நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.மார்க்கண்டன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கருப்பன், மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் ரவிக்குமார் ஆகி யோரும் விசாரணைக்குழுவில் இணைந்து செயல்பட்டனர். இந்த விசாரணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஹென்றி திபேன் செயல்பட்டார். இந்த பொது விசாரணையில் ஏராளமானோர் விசாரிக்கப் பட்டனர். பல முக்கிய பிரமுகர்கள் சாட்சியம் அளித்தனர். இறுதியாக, விசாரணைக்குழு ஒரு விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
அந்த விசாரணை அறிக்கை யில் தலித் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் தொடுத்த தாக்குதல்களையும், இழைத்த கொடுமைகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. பெரிய எண்ணிக்கையில் தலித் மக்கள் கைது செய்யட்டதும், கைது செய்யப் பட்ட விதமும் எந்தவொரு மனித உரிமைச் சட்டத்தின் கீழும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என குறிப் பிட்டது. பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என கண்மூடித் தனமாக கைது செய்ததுடன் அவர்கள் அடித்து காயப் படுத்தப்பட்டதை விசாரணைக்குழு வேதனையோடு குறிப்பிட்டது. காவல்நிலையத்தில் அநேக பெண்கள் ஏறக்குறைய ஆடையில்லாமல் வைக்கப்பட்டிருந்ததையும், குழந்தைகள் உணவு இல்லாமல் பசியால் தவித்திருந்த தையும் பற்றி பெண்கள் சாட்சியம் அளித்ததை அந்த அறிக்கை விரிவாக குறிப்பிட்டது. தலித் மக்களின் வீடுகள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் இருந்தும் கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. தலித் மக்களை தாக்கியதிலும், கைது செய்ததிலும் காவல்துறை கொடூரமாக நடந்து கொண்டது என்றும், தலித் மக்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற உணர்வில் நாகரீகத்தின் எல்லா எல்லைகளையும் கடந்த முறையில் நடந்து கொண்டார்கள் என்றும் அறிக்கை குறிப்பிட்டது. காவலர் முருகன் கொலை செய்யப்பட்டது குறித்து ஒரு சரியான பாரபட்சமற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியது. தாக்குதல் நடத்திய எல்லா காவல்துறையினரும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டிய வர்களாக இருக்கிறார்கள் என அந்த அறிக்கை உறுதிபடக் குறிப்பிட்டது. காவல்துறையின் தாக்குதல் குறித்து உயர்நீதி மன்ற நீதிபதியை கொண்ட ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பொது விசாரணைக்குழு வற்புறுத்தியது. மொத்தத்தில் சங்கரலிங்கபுரம் - சல்லிசெட்டிப்பட்டி கிராமங்களில் காவல்துறையின் கொடூர தாக்குதல்கள் மனித உரிமை மீறலின் உச்சபட்ச அடையாளமாக திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.