tamilnadu

img

தொண்டைமான் அரச முத்திரை, செப்பேட்டு அருங்காட்சியகத்திற்கு வழங்கல்

புதுக்கோட்டை, பிப்.1-  புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரையும், செப்பேடும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.  அரச முத்திரையானது சுமார் 250 ஆண்டுகள்  பழமை வாய்ந்தது. இதிலுள்ள ஓவியங்கள் பலகை யின் மீது மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது. செப்பேடு பொது ஆண்டு 1798 ஆம் ஆண்டைச் சேர்ந்தது.  இதை அப்போது புதுக்கோட்டையை ஆண்ட  விஜய ரகுநாத தொண்டைமான் மன்னர் ஸ்ரீரங்கம்  ரெங்கநாதருக்கு அகண்ட தீபம் என்ற விளக்கு ஏற்றுவதற்காக சிங்கத்தா குறிச்சி என்ற  கிராமத்திலுள்ள பெரியகுளத்து வயல் கோவிந்த தாஸ் என்ற வைஷ்ணவ பிராமணருக்கு நிலக்கொடை வழங்கியதற்காக கொடுக்கப்பட்ட செப்பேடாகும்.  இவற்றை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை அரசு அருங்காட்சி யகக் காப்பாட்சியரிடம் ஒப்படைத்தார். அருங்காட்சி யகத்தில், தொண்டைமான் அரச முத்திரையும், செப்பேடும் விரைவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.  இந்நிகழ்வில், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி, மாவட்ட ஆட்சியரக தலைமை உதவியாளர் செ.வெ.நாகநாதன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மற்றும் கல்வெட்டாய்வாளர் கரு.இராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;