tamilnadu

img

காந்திஜி பாராட்டிய தில்லையாடி வள்ளியம்மை

கிறிஸ்தவ தேவாலயத் தில் தான் திருமணங் கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடை பெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென் னாப்பிரிக்க ஆங்கி லேய அரசு தெரிவித்தது. அப்போது தென்னாப்பிரிக் காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டி ருந்த மகாத்மா காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தி யர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லை யாடி வள்ளியம்மை. அதற்காக 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோ தும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாத தால் வெளியே வர மறுத்தார். பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடு தலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை. வெளியே வந்த வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் நாள் உடல் நலக் குறைவால் காலமானார்.  பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை “பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளி யம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்” என காந்தி பாராட்டியுள்ளார்.