தருமபுரி, மே 5 - அதிகாரத்திற்குள் மக்களை அடை க்க கலையை கையில் எடுக்கிறார்கள் என்று திரைக்கலைஞர் ரோகிணி கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி பெரியார் மன்றத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் “கலையும், வாழ்வும்” என்ற தலைப்பில் திரைப்படக் கலைஞரும், தமுஎகச துணைத் தலைவருமான ரோகிணி பேசுகையில், பொதுவாக சமூகத்தில் மக்களிடையே அதி காரத்தை திணிக்கின்றனர். அதிகா ரத்தை திணிக்க கலைவடிவத்தையும் பயன்படுத்துகின்றனர். எல்லா கலை களிலும் மூத்த கலை தெருக்கூத்தா கும். எல்லா கலைகளும் இங்கிருந்து தான் தொடங்குகின்றன. மக்களை தன் அதிகாரத்திற்குள் அடைக்க வேண் டும் என்று நினைப்பவர்கள் கலையைத் தான் கையில் எடுக்கிறார்கள். சமூகத்தில் வழிபாட்டுத் தலத்தில் சொல்லப்படும் பாடம் பெண்களுக்கு கல்வி முக்கியமில்லை.
பெண்கள் குடும்பத்தை கவனித்தால்போதும், குழந்தை பெற்றெடுத்தால் போதும் என்ற கருத்தை திணிக்கின்றனர். இக் கருத்துக்களை திணிக்க கலை வடி வத்தை கையில் எடுத்தனர். பெண்களை நாட்டார் தெய்வமாக வணங்குகின்ற னர். ஒவ்வொரு குடும்பமும், சிறு தெய்வ வழிபாடு செய்கின்றன. கடந்த காலங்களில் பெண்கள் சமூக விதி களை மீறுபவர்களை கொலை செய்து விடுவார்கள். அவர்களின் சாபம் மக்களுக்கும், குடும்பங்களுக்கு வரக்கூடாது என அவர்களை பெண் நாட்டார் தெய்வமாக வழிபடுகின்றனர். பெண்கள் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் அவரது குடும்பத்தாரே கொலைசெய்து விடு கின்றனர். ஒவ்வொரு நாட்டார் தெய்வத்திற்குப் பின்னாடியும் ஒரு உண்மை உள்ளது. பெண்கள் வேலைக்கு சென்றால், வீட்டுப்படியை தாண்டினால், பத்தினி இல்லை என பழமைவாதிகள் கூறுகின்றனர். சமூகத்தில் பெண்களை மலரே, மானே, தேனே என வர்ணிக்கின்றனர்.
பெண்கள் அரிவாள் எடுத்தாலும் வெட்டும், ஆண்கள் தோசை சுட்டா லும் ஒன்றும் ஆகாது. பெண்கள் இயக்கி னாலும் பிளைட்டும், ராக்கெட்டும் பறக்கும், சந்திர மண்டலத்தில் காலடி வைத்தாலும் அது ஏற்றுக்கொள்ளும். இவை யாவும் பெண் என்பதால் புறக் கணிக்காது. குடும்பத்தில் பெண்களை சமமாக பார்க்க, மதிக்க நம் பிள்ளை களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்து வந்தாலும் மலக்குழி மரணம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. மலக்குழி மரணத்திற்கு, இங்கு சமரசம் தான் செய்யப்படுகிறது. இழப்பீடு கிடைக்கிறது, ஆனால் நீதிமட்டும் கிடைப்பதில்லை. எவ்வளவு தொழில் நுட்பம் வந்தாலும் இதனை தடுக்க அதிகார வர்க்கத்திற்கு மனமில்லை. வாச்சாத்தி கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அந்த பெண்கள் நடத்திய நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் விளை வாக பல ஆண்டுகாலம் கழித்து நீதி கிடைத்தது.
அந்த மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், குற்றவாளிகள் மேல்முறை யீட்டுக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காமல் இருக்க, அடுத்த தலைமுறைக்கு இது போன்ற கொடுமைகளைச் சொல்ல வேண்டும் என்றார். இக்கருத்தரங்கிற்கு, மாவட்டத் தலைவர் எ.கொ.அம்பேத்கர் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் ம.சிங்கார வேல் வரவேற்றார். மாவட்ட நிர்வாகி கள் சுகந்திபாஸ்கரன், வேலகணபதி, ஜெயராமன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் கு.சிவப்பிரகாசம் துவக்கவுரையாற்றினார். முன்னதாக நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் நவகவி, மாவட்டப் பொருளாளர் ஆதிமுதல்வன் ஆகியோர் கவிதை வாசித்தனர். தகடூர் புத்தக பேரவை தலைவர் இரா.சிசுபாலன், மக்களுக்கான மருத்துவ சங்க தலைவர் மருத்து வர் க.பகத்சிங், பேராசிரியர் அ.முருக தாஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆசிரியர் ம.பழனி, மாவட்டச் செயலாளர் பெ.துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிறை வாக மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன் நன்றி கூறினார்.