tamilnadu

img

புத்திசாலிப் பாட்டி - தமிழில்: ச.வீரமணி

 ஜப்பானில் மூத்தவர்களை, இளைய வர்கள் மிகவும் மதித்திடும் காலம் ஒன்றிருந்தது. இளைய சமுதாயத்தினர் மூத்தவர்களின் நலனில் அப்போது மிகவும் அக்கறை கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் ஒரு கிராமத்தில் விவசாயி,  டாரோ, என்பவர் தன்னுடைய மிகவும் வயதான பாட்டியுடன் வசித்து வந்தார். டாரோ, தன் பாட்டியிடம் மிகவும் அன்பு செலுத்தி வந்தார். டாரோவும் மற்ற விவசாயி களைப் போலவே தன்னுடைய நிலத்தில் நெல், கோதுமை மற்றும் காய்கறிகள் விளை வித்து, மகிழ்ச்சியுடனும், நிறைவாகவும் வாழ்ந்து வந்தார். ஆனாலும் எல்லாமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லையே. ஒரு சமயத்தில் மழை பொய்த்து  விட்டது. வறட்சி நிலைமை ஏற்பட்டு, நிலங்கள்  எல்லாம் காய்ந்துபோயின. கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இவற்றைத் தொடர்ந்து உணவுப் பற்றாக்குறை ஏற்படுமோ என்கிற பயம் அனைவர் மத்தியி லும் வரத்தொடங்கியது. கிராமத் தலைவர் கிராம மக்களைத் திரட்டி, “இந்தப் பிரச்சனையைத் தீர்த்திட ஏதாவது வழி காண்பது குறித்து நாம் ஏதாவது சிந்தித்திட வேண்டும்,” என்றார். “ஒவ்வொருவருக்கும் உணவு தேவை. ஆனால், தண்ணீர் இல்லாமல் எப்படி விவ சாயம் செய்வது?”

என்று ஒரு விவசாயி கேட்டார். “எனக்கும் தெரியும். இதற்கு ஒரே தீர்வு  இளைஞர்கள் கடுமையாக உழைத்து நிலை மையைச் சரி செய்ய வேண்டும்,” என்று கூறிய கிராமத் தலைவர் பின்னர் சிறிது நேரம் கழித்து, “அறுபது வயதுக்கு மேற்பட்ட வர்கள் எல்லாம் மலை உச்சிக்குச் சென்றிட வேண்டும். அங்கே அவர்களுக்கு எளிதாக உணவு கிடைக்கும்”, என்று கூறினார். இதன்பின்னர் அனைத்து முதியோர் களும் தங்கள் வீடுகளில் உள்ள இளைஞர் களை கிராமத்திலேயே இருக்கச் செய்து விட்டு, துயரத்துடன் விடைபெற்று மலை  உச்சிக்கு நடந்து சென்றார்கள். ஆனால் டாரோ  அவ்வாறு தன் பாட்டியை அனுப்ப விரும்ப வில்லை. அவன் தன் பாட்டியை தன் வீட்டில் யாரும் கவனிக்காது ஒதுக்குப்புறமாக இருந்த  இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். பாட்டிக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்துத் தேவைகளையும் கவனித்து வந்தார்.  

  ஆனாலும் அந்தக் கிராமத்திற்குத் துன்பங்கள் வேறொரு வடிவத்தில் தொடர்ந்து  வந்தன. கிராமத் தலைவர் ஒரு அறிவிப்பை  அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒட்டி வைத்தார். பக்கத்துக் கிராமத்தை ஆண்டு  வந்த ஒரு கொடுங்கோல் அரசன், கிரா மத்தார் தான் கூறியுள்ள மூன்று புதிர்களை விடுவித்திட வேண்டும் என்றும் அவ்வாறு விடுவிக்க முடியவில்லையானால், கிரா மத்தில் உள்ள நிலத்தில் பாதியை அப கரித்துக் கொள்வதாகவும் மிரட்டியிருக் கிறான். எனவே, இந்தப் புதிர்களை விடு விக்கும் கிராமத்தார்களுக்கு அவர்களுக்குத் தேவைப்படும் உணவை அளிப்பதாகவும் கிராமத்தலைவர் அந்த அறிவிப்பில் கூறி யிருந்தார். இதைப் பார்த்த டாரோ உடனடியாகத் தன் பாட்டியிடம் சென்று இதைக் கூறினார். இந்தப் புதிர்களுக்கு விடை அளித்தால் ஒருவேளை கிராமத் தலைவர் தங்கள் பாட்டியைத் தங்கள் கிராமத்திலேயே தங்க வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என டாரோ கருதினார். “பாட்டி, கவனமாகக் கேள். ஒரு மரத் துண்டின் எந்தப் பகுதி வேருக்கு நெருக்க மாகவும், எந்தப் பகுதி மேலாகவும் இருக்கும்?” என்று கேட்டார். பாட்டி கொஞ்சநேரம் கண்ணை மூடிச் சிந்தித்துவிட்டு, “மரத்துண்டடை தண்ணீரில் மிதக்கவிடு. வேருக்கு நெருக்கமான பகுதி  தண்ணீருக்குள் மூழ்கும். ஆனால் மேலே யுள்ள பகுதி மிதந்துகொண்டே இருக்கும்,” என்றார். டாரோவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பதில் அநேகமாகச் சரியாக இருக்கும் எனக்  கருதி அடுத்த புதிர் குறித்து கேட்டார். “சாம்பலிலிருந்து எப்படிக் கயிறு திரிக்க  முடியும், பாட்டி?” என்று கேட்டார். பாட்டி சிறிதுநேரம் கண்ணைமூடி யோசித்துவிட்டு, பின்னர் கூறினார்: “ஒரு தடித்த கயிறை எடுத்துக்கொள். அதன்மீது முழுமையாக  உப்பைப் பூசு. அதன் ஒரு நுனியைப் பற்ற வை. அது மெதுவாக அங்குலம் அங்குலமாக எரிந்து கடைசியில் பார்த்தாயானால் ஒரு சாம்பல் பூத்த கயிறு மிச்சப்பட்டிருப்பதைக் காண்பாய்,” என்றார். டாரோவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “நீ பெரிய மேதை பாட்டி. இப்போது மூன்றாவது புதிரைக் கூறுகிறேன்,” என்று கூறிவிட்டு மூன்றாவது புதிரைக் கூறினார். “ஒரு பட்டுநூலை வளைவுகள் நிறைந்த குழாய் வழியே நுழைக்க முடியுமா? முடியுமென்றால், எப்படி?” இந்தப் புதிரைக்கேட்டவுடனேயே பாட்டி சத்தத்துடன் சிரித்துவிட்டார். “மிகவும் எளிது. பட்டு நூலின் ஒரு  முனையை ஓர் எறும்பின் காலில் கட்டிவிடு. குழாயின் மறுமுனையில் தேனைக் கொஞ்சம் ஊற்றி வை. பின்னர் எறும்பை குழாயின் அடுத்த முனைக்குள் செலுத்தினால், எவ்வ ளவு வளைவுகள் இருந்தாலும் அது தேனை நோக்கிச் செல்லும். அது செல்லும்போது கயிறும் கூடவே செல்லும். இவ்வாறு மிக எளிதாக பட்டுநூலை குழாய்க்குள் அது எவ்வளவு வளைவுடன் இருந்தபோதிலும் நுழைத்திட முடியும்,” என்றார்.

என் பாட்டி எவ்வளவு புத்திசாலி! இவ்வளவு புத்திசாலித்தனமான பாட்டியைப் பெற்றதற்ககாக என்றார் நான் பெருமைப்பட வேண்டும். பின்னர் டாரோ விரைந்துசென்று தங்கள் கிராமத்தலைவரிடம் மூன்று புதிர்களுக்கான விடைகளையும் கூறினார். கிராமத்தலைவருக்கும் மகிழ்ச்சி. எவ்வளவு புத்திசாலித்தனமான பையனை நாம் நம் கிராமத்தில் பெற்றிருக்கிறோம் என்று  அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “ஓ, மன்னிக்கணும் ஐயா. இந்தப் புதிர் களுக்கான விடைகளைக் கண்டறிந்தது, நானல்ல. என் பாட்டி. அவர்தான் அனைத்துப் புதிர்களையும் விடுவித்தார்,” என்றார். கிராமத்தலைவர் குற்றவுணர்வால் மிகவும் சங்கடப்பட்டார். வயதானவர்கள் எல்லோருமே பயனற்றவர்கள் என நினைத்து விட்டோமே என மிகவும் வெட்கப்பட்டார். அவர் டாரோவுக்கு நன்றி கூறினார். பின்னர் பாட்டியையும் பார்த்து “உங்கள் புத்திசாலித் தனத்தால்தான் கிராமம், பக்கத்து கிராமத்தின்  கொடுங்கோல் அரசனிடமிருந்து தப்பித்தது,” என்று கூறினார். பின்னர் கிராமத்தலைவர் மலை உச்சிக்குச் சென்ற முதியோர்கள் அனைவரையும் திரும்பக் கிராமத்திற்கு வரவழைத்தார். அவர்களுக்கு உரிய மரியாதையைச் செலுத்தினார். கிராமத்தில் மீண்டும் நன்கு மழை பெய்தது. கேணிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. நிலங்களும் செழித்து வளர்ந்தன. இவற்றுக்குக் காரணமான டாரோவின் பாட்டிக்கு அனைவரும் நன்றி செலுத்தினார்கள். நன்றி: ஆசிய நாட்டுப்புறக் கதைகள், பப்ளிகேசன் வெளியீடு