tamilnadu

வேளாண் அவசரச்சட்டத்தில் புதியதாக ஒன்றும் இல்லை

விவசாயிகள் சங்கம் விமர்சனம்

சென்னை,ஜூன் 2- தமிழக அரசு பிறப்பித்துள்ள வேளாண் அவசரச்சட்டத்தில் புதியதாக ஒன்றும் இல்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் விற்பனை (ஒழுங்குப் படுத்துதல் ) சட்டம் 1987-ல் சில சீர்திருத்தங்களை குறிப்பிட்டு தமிழக அரசு செவ்வாயன்று அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எவரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழக் கத்திற்கு ஒரு சட்ட வடிவத்தை அரசு கொடுத்துள்ளது. விவ சாயிகளிடமிருந்து விற்பனை கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை தவிர இந்த அவசர சட்டத்தில் புதியதாக ஒன்றும் இல்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருதுகிறது.

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை யை அரசு தீர்மானிக்காமல் வியாபாரிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகளை வைத்து விட்டு இத்த கைய சிறு அளவிலான சீர்த்திருத்தங்களால் பெரிய விளைவு கள் எதுவும் ஏற்படாது என்பதை அரசுக்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.