tamilnadu

தேனி, திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்

100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை:  மாதர் சங்கம் மனு 

தேனி:
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டுமென ஊராட்சித் தலைவரிடம் மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது .பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும்.கொரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டுமென ஊராட்சித் தலைவரிடம் மாதர் சங்க தேனி மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, தாலுகா குழு உறுப்பினர் சரோஜா, மகாலட்சுமி, தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் ஜி. முத்துகிருஷ்ணன், சிஐடியு தலைவர் ஆர்.கே. ராமர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

**************

மார்க்சிஸ்ட் கட்சி கிளை அமைப்பு

சின்னாளபட்டி: 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வத்தலக்குண்டு ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டுபுதிய கிளைகள் அமைக்கப்பட்டன விராலிபட்டி கிளை செயலாளராக சி சுரேஷ் குமார், சாமியார் மூப்பனார்பட்டி கிளைச் செயலாளராக கே.சோலைமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றியச் செயலாளர் கேடி கலைச்செல்வன், சிஐடியு நிர்வாகி எஸ்.வின்சென்ட் ஆகியோர் அமைப்புக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

;