சென்னை, அக்.21- யமஹா தொழிலாளர்கள் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று சிஐடியு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் சிப்காட் பகுதியில் ஜப்பா னிய இருசக்கர வாகனமான யமஹா உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது, 11-10-2022 இல் இருந்து 20-10-2022 வரை 10 நாட்கள் பெரும் பான்மையான நிரந்தரத் தொழி லாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். 10 நாட்கள் நடந்த போராட்டம் இறுதியில் மகத்தான வெற்றி பெற்றது. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று இருதரப்பும் ஏற்றுக் கொண்ட அறிவுரை அடிப்படையில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. விபரம் வருமாறு;
2018 ஆம் ஆண்டு யமஹா தொழிற்சாலையில் இந்தியா யமஹா தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கம் அமைக்கப் பட்டு பதிவும் செய்யப்பட்டது. இதை விரும்பாத ஆலை நிர்வா கம் பழிவாங்கும் நடவடிக்கை களிலும், தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத செயல் களிலும் ஈடுபடத் தொடங்கி யது. திடீரென இரண்டு தொழி லாளர்களை வேலை நீக்கம் செய்து பிற தொழிலாளர்களை அச்சுறுத்தும் தந்திரத்தைக் கையாண்டது. இந்த வேலை நீக்கத்தை எதிர்த்தும், இரண்டு தொழிலாளர்களையும் திரும்ப வேலையில் சேர்க்க வேண்டு மென்றும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்றும் 21.9.2018 முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. 55 நாட்கள் நடந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகு இருதரப்பும் ஏற்றுக்கொண்ட அறிவுரை அடிப்படையில் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது. இரண்டு தொழிலாளர் களும் பணியில் சேர்க்கப்பட்ட னர். இந்தியா யமஹா தொழி லாளர் சங்கத்தின் ஆலைமட்ட நிர்வாகிகளோடு முதல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிர்வாகிகள் தொழிலாளர்களுக்கு துரோ கம் செய்து, நிர்வாகத்தின் சலுகை களையும் ஆதாயங்களையும் பெற்றுக் கொண்டு நிர்வாகத்தின் கைக்கூலிகளாக மாறினார்கள்.நிர்வாகத்திற்கு இசைவான இந்த நிர்வாகிகளைக் கொண்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இறுதிப் படுத்தப்பட்டது, சங்கத்தலைவ ரும் சிஐடியு தலைவருமான அ.சவுந்தரராசன், உதவித் தலைவர்கள் இ.முத்துக்குமார், எஸ்.கண்ணன் ஆகியோருக்கும் தெரியாது. பேரவை கூட்டப் படாமல், தொழிலாளர் ஒப்புதல் பெறப்படாமல், தொழிலாளர் முதுகுக்குப் பின்னால் துரோக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதை ஏற்க முடியாது என்று பெரும் பகுதி தொழிலாளர்கள் நிரா கரித்தனர். பேரவையை கூட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இயக்கங்கள் நடத்தினர். ஆனால், நிர்வாகத் துணையோடும் இறுமா ப்போடும் நாங்கள்தான் தொடர்ந்து நிர்வாகிகளாக இருப்போம் என்று மூன்றாவது ஆண்டிலும் கூறி னார்கள். சங்க சட்டவிதிகளின்படி ஆண்டிற்கொரு முறை நிர்வாகிகள் தேர்வு நடத்த வேண்டும். தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு பேரவை கூட்டப்பட்டது. முந்தைய நிர்வாகி களும் கலந்து கொண்டு பழைய நிர்வாகிகள் அப்படியே பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று பேரவையில் கோரினார்கள். பேரவை வன்மையாக கண்டித்து நிராகரித்து விட்டது. பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்து தேர்தல் பணிக்குழுவைதேர்ந்தெடுத்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் நிர்வாகத்திற்கு ஆதரவான பழைய நிர்வாகிகள் போட்டியிடவில்லை, தோற்போம் என்று அவர்களும் அறிவார்கள். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், போட்டி யின்றி வெற்றி பெற்றவர்களும் புதிய நிர்வாகி களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிர்வாகிகள் கோரிக்கை எழுப்பினர். உடனே நிர்வாகம் பழிவாங்கத் தொடங்கியது. நிர்வாகம் வழங்கிய 2020-21 ஆம் ஆண்டி ற்கான போனசை துரோகிகளின் தலைமையை ஏற்காத தொழிலாளர்களிடமிருந்து திரும்ப பிடித்தது. அனைத்திந்திய வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டதற்காக 8 நாட்கள் ஊதியத்தை பிடித்தம் செய்தது. 2021-22 ஆம் ஆண்டிற் கான கருணைத் தொகையையும் இந்தத் தொழி லாளர்களுக்கு வழங்கவில்லை. 300-க்கும் மேற்பட்ட குற்றக் குறிப்பாணையும் வழங்கப் பட்டது. பண இழப்பு மட்டும் ஒவ்வொரு தொழி லாளிக்கும் 50 ஆயிரம் ரூபாய். இவ்வளவு பெரிய இழப்புகளைத் திணித்த பிறகும் சங்க உரிமையை விட்டுத்தர முடியாது என்று பெரும்பான்மைத் தொழிலாளர்கள் நின்றார்கள். தொழிலாளர் துறையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கண்டன அட்டை அணிந்து பணி செய்தனர். ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. உணவுப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொழிற்சங்க பதிவாளரிடம் யாருக்குப் பெரும்பான்மை என்று அறிவிக்கக் கோரி நிர்வாக கையாட்கள் விண்ணப்பம் செய்த னர். 8 மாதமாகியும் அவர் தனது முடிவை சொல்ல வில்லை. புதிய நிர்வாகிகள் தங்கள் பெரும்பான்மையை ஆவணங்கள் மூலமாக நிரூபித்துவிட்டனர்.
இந்த நிலையில் நிர்வாகம் தொழி லாளர்களின் அங்கீகாரம் பெறாத தங்களின் கையாட்களோடு இரண்டாவது ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தியது. இதை எதிர்த்து வேலை நிறுத்த நோட்டீஸ் தரப்பட்டது. மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மற்றவர் களோடு நிர்வாகம் ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்களோடு நிர்வாகம் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பிறகு நமது தொழிற்சங்க பெயருக்கு முன்னால் சுதந்திர என்ற வார்த்தை சேர்த்து, சுதந்திர இந்தியா யமஹா தொழிலாளர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிர்வாகத்தின் துணையோடு அந்த நபர்கள் பதிவு செய்தனர். இந்த சங்கம் ஒரு சில நாட்களிலேயே பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் துறை வரலாற்றில் இது மிகப் பெரும் அதிசயம். பதிவிற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் ஆகிற நிலையில் இவர்களுக்கு மின்னல் வேகத்தில் பதிவு கிடைத்தது, இது தொழிற்சங்க பதிவாளரின் அப்பட்டமான நிர்வாக ஆதரவு நடவடிக்கையாகும். இந்த போட்டிச் சங்கத்தோடு ஒப்பந்தம் பேசப்பட்டு ஊதிய உயர்வு முடிந்துவிட்டதாக 10.10.2022 அன்று நிர்வாகம் அறிவித்தது. போட்டிச் சங்கத்தை அமைத்து, அனைத்து ஜன நாயக வழிமுறைகளையும் காலில்போட்டு மிதித்து நிர்வாகமும், துரோகிகளும் சேர்ந்து உருவாக்கிய இந்த ஒப்பந்தந்தான் உடனே உள்ளிருப்பு வேலை நிறுத்தம் வெடித்ததற் கான காரணம்.
இந்த வேலை நிறுத்தம் உறுதியாக நடை பெற்றநிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர், தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் 20.10.2022 அன்று இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட அறிவுரை வழங்கப்பட்டது. இதில் 1. இரண்டு சங்கங்களில் எந்த சங்கம் பெரிய சங்கம் என்பதை தீர்மானிப்பதற்கான வழி முறையை தொழிலாளர் துறை முன்பு இறுதிப் படுத்தி ஜனவரி 2023க்குள் பெரும்பான்மையை தீர்மானிக்க வேண்டும். 2. இதுவரை பிடித்தம் செய்த மற்றும் வழங்காமல் பாரபட்சமாக மறுத்துவந்த போனஸ் உள்ளிட்ட தொகைகளை திரும்ப வழங்க வேண்டும். (ரூ.50ஆயிரம்) 3. இடை நீக்கத்தில் உள்ள இரண்டு தொழி லாளர்கள் மீது அதிகபட்ச தண்டனை வழங்கா மல் வேலைக்கு எடுக்க வேண்டும். 4. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. 5. அவர்கள் போட்ட துரோக ஒப்பந்தத்தை மற்றவர்கள் மேல் திணிக்கக்கூடாது.
6. தொழிலமைதியைக் காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது இது தொழிற்சங்க ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! போட்டிச் சங்கங்களை ஊக்குவிக்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை! பணத்தாசை காட்டி சில தனி நபர் களை அடிமையாக்கலாம். ஒரு வர்க்கம் என்ற முறையில் தொழிலாளி வர்க்கத்தை பணத் தாசையால் வீழ்த்த முடியாது என்கிற பாடம்! நிர்வாகம் தொழிற்சங்க விஷயத்தில் தலையிடக் கூடாது என்பதும், எந்த சங்கம், எந்தத் தலைமை என்பதை தீர்மானிக்கும் உரிமை தொழி லாளிக்கு மட்டுமே என்பதும் அழுத்தமாக உறுதியானது! இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக காஞ்சிபுரம், செங்கற்பட்டு மாவட்டங்களிலும் தமிழகம் முழுவதிலும், யமஹா விற்பனை நிலை யங்கள் முன்பு எழுச்சியாக நடந்த ஆர்ப்பாட்டங் களும், உணவுப் புறக்கணித்தல் போன்ற போராட்டங்களும் உள்ளிட்ட சகோதர ஆதரவு இயக்கங்களும் வெற்றிக்கு பெரிதும் உதவின. அந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!