tamilnadu

img

குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

திருநெல்வேலி. ஜூலை 7- குற்றாலத்தில் சீசன் தாமதமாக கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதிகரித்தது.  மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் விழுந்தது. கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்து விட்டது. மெயின் அருவி யில் குறைந்த அளவே தண்ணீர் விழு கிறது. சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்துச் சென்றனர். ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் குறைவாக விழுந்தது.

;