மேட்டூர்,டிச.15- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லில் தற்போது 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவி களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணி கள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வரு கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 11 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன் படி இன்றும் அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. அணைக்கு வரும் தண்ணீரும், அணை யில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீ ரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 32-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கி றது. அணைக்கு வரும் தண்ணீரை அதி காரிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.