இடுக்கி, ஏப்.27- கேரளத்தின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான இடுக்கியில் அதன் கொள்ளளவில் 32.38 சதவிகிதம் தண்ணீர் மட்டுமே உள்ளது. இது 10 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். இதனால் மூலமற்றத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. சராசரி மின் உற்பத்தி 6.039 மில்லியன் யூனிட்கள். இந்த அளவிலும் ஒரு மாதமாக நீர்த்தேக்கத்தில் தண்ணீர் உள்ளது. இம்முறை திட்டப் பகுதிகளில் பருவ மழையும், கோடை மழையும் போதிய அளவில் இல்லை. அதே நேரத்தில், மின் நுகர்வு சாதனையை எட்டியது. நீர்த்தேக்கத்தில் பாயும் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகளின் நீர் ஓட்டம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. மின் உற்பத்தி க்கு பின் திறக்கப்படும் தண்ணீர் எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது 4.145 மில்லியன் கன மீட்டர் யூனிட் தண்ணீர் (4145 மில்லியன் லிட்டர்) இவ்வாறு வெளி யேற்றப்படுகிறது.