tamilnadu

img

இலச்சினை, தபால் உறை, சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, அக்.5- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று  (அக்.5) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம்,  கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்ட பத்தில்,  வள்ளலார் முப்பெரும் விழாவினை  கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார் - 200” இலச்சினை, தபால் உறை மற்றும்  சிறப்பு  மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங் களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சி களையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.  “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 5.10.1823 அன்று சிதம்பரம் அருகில் மருதூரில் பிறந்தார். ஆன்மீகவாதியான வள்ள லார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை யை நிறுவினார். கடவுளின் பெயரில் செய்யப் படும் உயிர்பலியை தடுத்து நிறுத்தினார்.  மக்களின் பசியை போக்குவதற்காக வட லூரில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். சமத்துவம், கல்வி, தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். திருவருட்பா, ஜீவ காருண்யம், அருள்நெறி போன்ற பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார்.  2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பில், ‘உயிர்த்திரள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல்  பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளலார் பிறந்து 200-வது ஆண்டு தொடக்கமும் (5.10. 2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது  ஆண்டும் (5.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று  நிகழ்வுகளையும் இணைத்து அக்டோபர் 2022  முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்தப்  படும். இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப் படும்’ என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அருட்பிரகாச வள்ளலாரின் முப்  பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகை யில், டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில், 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப் பட்டது.  வள்ளலார் பிறந்த 200-ஆவது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்ம சாலை தொடங்கிய 156-ஆவது ஆண்டு கொண்  டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி  தரிசனம் காட்டுவித்த 152-ஆவது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் வள்ளலார் முப்பெரும் விழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, “வள்ளலார் தனிப்  பெருங்கருணை” சிறப்பு மலரை வெளியிட்டு, சுத்த சன்மார்க்க அன்பர்கள் மழையூர் சதா சிவம், சா.மு. சிவராமன், தனலட்சுமி, எம்.பால கிருஷ்ணன், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோ ருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, வள்ளலார் முப்  பெரும் விழாவில், வள்ளலாரின் “தனிபெருங் கருணை நாள்” முன்னிட்டு 2022 அக்டோபர் 5 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்  கும் திட்டத்தை  தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை  அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை - உழவர்  நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்  செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து  சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி  தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுத் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், உறுப்பினர்கள் சாரதா நம்பி ஆரூரன், அருள்நந்தி சிவம், கே.என்.உமாபதி, உமாபதி, தேசமங்கையர்க்கரசி, மெய்யப்பன்,  முனைவர் உலகநாயகி, டாக்டர் சக்திவேல் முருகனார், ஏ.பி.ஜெ.அருள் (எ) என்.இளங்கோ, ஜி.சந்திரகாசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து  சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமர குருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், இந்திய அஞ்சல்துறையின் தென் சென்னை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் டி.திவ்யா  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.