tamilnadu

img

‘இறையூர் சம்பவம் மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது’ அரை மணி நேரத்தில் தலையிட்டது சிபிஎம்

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக அனைத்து சமூக மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதுதான் எங்கள் கட்சி : கே.பாலகிருஷ்ணன்

புதுக்கோட்டை, டிச.30 - இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யில் மனிதக் கழிவை கலந்த சம்பவம் மனித நாகரிகத்தையே கேள்விக்  குள்ளாக்கி உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு  ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை  கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இச்சம்பவத்தைக் கண்டித்து காவேரி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு  கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய தாவது:

மனித நாகரிகத்தையே கேள்விக் குள்ளாக்கிய கொடூரமான சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. நாகரிகமான உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் ஏற்படுத்துகிறது. மலத்தை காலில் மிதித்துவிட்டால் பாம்பை மிதித்து விட்டதைப் போல பதறிப் போகிறோம். பாதையில் மலத்தைப் பார்த்தாலே சங்கடம் ஏற்படுகிறது. மனிதன் செய்கிற காரியமா இது? இந்தக் கிராமத்தில் உள்ள வர்கள், தங்கள் ஊரின் கறையைப் போக்க வேண்டுமென்றால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். பட்டியலின மக்களின் உரிமை களுக்காக பல அமைப்புகள் வேலை செய்கின்றன. அவர்கள் பட்டியலின மக்களை மட்டுமே திரட்டி அவர் களுக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். ஆனால், பட்டியலின மக்களுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்துப் போராடும் கட்சி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. பாதிக்கப்படுவது எந்த சாதி  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பாகுபாடு பார்ப்பதில்லை. தொடர்ச்சி யாக பட்டியலின மக்கள் மீது  நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடு மைகளை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

சிபிஎம் எம்எல்ஏவின் உடனடி தலையீடு

இங்கே குடிநீரில் மனிதக் கழிவு  கலந்த கொடுமை தெரிய வந்த அரை மணி நேரத்தில், இந்தத் தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.சின்னத்துரை சம்பவ  இடத்திற்கு வந்துள்ளார். சம்பந்தப் பட்ட அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கு உட்படுத்தினார்.

அந்தப் பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.  அவர் கொடுத்த அழுத்தம்தான், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதி க்கு வரவைத்தது. எல்லா சமூகத்தி லும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர் கள் உள்ளனர். குறிப்பிட்ட சாதிக்குள் பிரச்சனை வரும்போது, பிற சாதி களில் உள்ள அரசியல் கட்சியினர் அந்தப் பிரச்சனையில் சம்பந்தப் படாமல் ஒதுங்கி நிற்கிறார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினர் யாரும், தாங்கள் எந்த சமூகத்தில் இருந்து வந்தோம் என்று  பார்ப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவுபடுத்தப்படும் போதும், பாதிக்கப்படும் போதும் களத்தில் இருந்து போராடும் முன்னணிப் படை யாக நாங்கள் இருக்கிறோம்.

பட்டியலின மக்களை கோவி லுக்கு அழைத்துச் சென்றதோடு, தீண்டாமையை கடைப்பிடித்ததாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்த  மாவட்ட ஆட்சியரையும், காவல் துறை அதிகாரிகளையும் பாராட்டு கிறோம். அதற்கு உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சரையும் பாராட்டுகிறோம்.  அதே நேரத்தில், இதுபோன்ற தீண்டாமைக் கொடுமை இங்கு மட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் நிலவுகிறது. காவல்துறையில் உள்ள தீண்டாமை ஒழிப்புப் பிரிவு செயல்படுகிறதா என அதிகாரிகள் விளக்க வேண்டும்.  மக்கள் ஒற்றுமையாக இருப் பதைத்தான் நாங்கள் விரும்பு கிறோம். கிராமங்கள் அமைதி யாக இருக்க வேண்டும் என்கிற  அதேநேரத்தில் மயான அமைதி யை விரும்பவில்லை. அனைத்து  மக்களும் சமம் என்கிற அமைதியைத் தான் விரும்புகிறோம். அத்தகைய அமைதியை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அந்த கடமையைச் செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடரும் தீண்டாமை

முன்னதாக அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு சில பகுதிகளிலும் இரட்டைக் குவளைமுறை, கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க முடியாத சூழல் நிலவுவது தெரிய வருகிறது. அந்தக் கிராமத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.சின்னதுரை எம்எல்ஏ, ஐ.வி.நாகராஜன், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குமாரவேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தன் ஆகியோர் பேசினர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

காவல்துறை குழு அமைப்பு

இதனிடையே நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பான  குற்றவாளியை கண்டுபிடிக்க திருச்சி டிஐஜி சரவணா சுந்தர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதவிப் பொருட்கள் வழங்கல்

வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களைச் சந்தித்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடந்துள்ள சம்பவத்தை கேட்டறிந்தார். உங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். உங்களுக்கு பக்க பலமாக இருப்போம் என்றார். மேலும், அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி பை, போர்வை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.