சென்னை,மார்ச் 16- சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. தமிழகத்திலும் அன்றைய தினம் தடுப்பூசி போடும் பணி தொடங்கி முழுவீச்சில் மேற்கொள் ளப்பட்டது. அதன்படி, 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதன்படி 12 வயது நிரம்பிய மாணவர்க ளுக்கும், 14 வயது வரையிலான மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நாடுமுழுவதும் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. தமிழகத்திலும் சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை அசோக்நகரில் தடுப்பூசி போடும் பணி மார்ச் 16 அன்று தொடங்கப்பட்டது. சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் 21 லட்சத்து 21 ஆயிரம் சிறுவர்- சிறுமிக ளுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 12 வயது முழுமையாக நிறைவடைந்த சிறுவர்- சிறுமிக ளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 12 வயது நடைபெற்றுக் கொண்டிருந்தால் தடுப்பூசி போடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.