tamilnadu

img

நீர்வழி ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி

தூத்துக்குடி, டிச.15 - அங்கமங்கலம் ஊராட்சியில் கடம்பா குளம் நீர் வழி ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும்  பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அங்கமங்கலம் ஊராட்சியில் உள்ள  கடம்பாகுளம் நீர் வழி ஆக்கிரமிப்பு அளவீடு  செய்யும் பணிகளை மீன் வளம் - மீனவர் நலன்  மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் புத னன்று துவக்கி வைத்து புறையூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  உடனிருந்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரண மாக தாமிரபரணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் உள்ள பெரிய குள மான கடம்பாகுளம் நிறைந்ததன் காரண மாக அதிகமான உபரிநீர் வெளியேற்றப் பட்டது.

கடம்பாகுளம் பகுதியில் உள்ள நீர்  நிலைகளில் பல்வேறு இடங்களில் ஆக்கிர மிப்பு காரணமாகவும் முள்செடிகள், அமலை செடிகள் வளர்ந்ததன் காரணமாகவும் விவசாய நிலங்கள் மற்றும்  குடியிருப்பு பகுதியில் நீர்  புகுந்து பாதிப்புக்குள்ளா னது. எனவே மாவட்ட நிர்வா கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனைவருடன் சென்று அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். நிரந்தர தீர்வு காண  வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகத்தின்  மூலம் பொதுப்பணித்துறை மற்றும் நில அள வைத்துறை மூலம் கடம்பாகுளம் நீர்வழி செல்லும் பாதையில் சுமார் 17 கி.மீ. உள்ள  ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி களுக்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வருவாய் துறை, பொதுப் பணித்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை ஆகிய  4 பிரிவுகளாக பிரிந்து அந்தந்த பகுதி களில் உள்ள நீர்வழி பாதைகளை 2 வார  காலத்திற்குள் அளவீடு செய்து ஆக்கிர மிப்புகளை அகற்றி அப்பகுதி பொதுமக்கள்  மற்றும் விவசாயிகள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச் சரின்  கவனத்திற்கு கொண்டு சென்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.