tamilnadu

img

2019இல் மோடி அரசு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்

“2019இல் மோடி அரசு நடத்திய “சர்ஜிக்கல் ஸ்டிரைக்”

ஆதாரங்கள் வேண்டும்” காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வெள் ளிக்கிழமை அன்று அக்கட்சியின் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பஞ்சாப் முதலமைச்சருமான சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டியில்,”கடந்த 2019  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ குறித்த மோடி அரசு ஆதாரங்களை வெளியிட வேண்டும்? அந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? பாகிஸ்தான் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சர்ஜிக்கில் ஸ்டிரைக், அந்நாட்டின் எந்த பகுதியில் நடந்தது? இதுதொடர்பாக எனக்கு எதுவும் தெரியவில்லை. நம் நாட்டில் யாராவது குண்டு வீசினால் நம் நாட்டு மக்களுக்கு தெரியாதா? ஆனால் ஒன்றிய பாஜக அரசு பாகிஸ்தா னில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாகக் கூறுகிறார்கள்; ஆனால் எதுவும் நடக்க வில்லை. எங்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக தெரியவில்லை. இது குறித்த ஆதாரத்தை ஆரம்பத்தில் இருந்தே நான் கேட்டு வருகிறேன்” எனக் கூறினார். இந்திய விமானப்படைக்கு எதிராக சரண்ஜித் சிங் சன்னி எழுப்பி யுள்ள கேள்வி சர்ச்சையையும், விவா தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.