tamilnadu

img

தனியார்மயமாகும் போக்குவரத்துக் கழக பணியிடங்கள்

சென்னை, ஏப். 18 - தமிழ்நாட்டில் உள்ள 8 போக்கு வரத்து கழகங்களில் 2013 ஆம் ஆண்  டிற்கு பிறகு பணி நியமனங்கள் நடை பெறவில்லை. இதனால் சுமார் 15ஆயி ரம் காலிப் பணியிடங்கள் உருவாகி உள்  ளன. எனவே, ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பம், அலுவலக பிரிவு பணி யிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் 100 ஓட்டுநர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்  400 ஓட்டு நர் மற்றும் நடத்துநர், மாநகர போக்கு வரத்து கழக (சென்னை)த்தில் 526 ஓட்டு நர்களை ஒப்பந்த முறையில் நியமிக்க உள்ளனர். இந்த சட்டவிரோத, ஒப்பந்தத்திற்கு முரணான நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி செவ்வா யன்று (ஏப்.18) தமிழகம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகளில் தமிழ்  நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்  மேளனம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மே 3 ஆம்  தேதி அல்லது அதற்கு பிறகு 6 வாரத்  திற்குள் வேலை நிறுத்தம் செய்ய ஏது வாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், மண்டல அலுவலக பொது மேலாளர்கள் என 22 இடங்களில் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப் பட்டது. இதன் ஒருபகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநரும், மாநகர போக்குவரத்து கழக கூடுதல் பொறுப்பாளருமான இளங்கோவனிடம், அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொருளாளர் எம்.ரவி, நிர்வாகிகள் நட ராஜன், முத்துப்பாண்டி, பாஸ்கர், அர சாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்  தின் பொதுச் செயலாளர் வி.தயா னந்தம், அன்பழகன், ராஜேந்திரன், மதி  ஆகியோர் அறிவிப்பினை வழங்கினர்.