tamilnadu

img

பால் கொள்முதல் விலையை உயர்த்துக!

ஈரோடு, செப்.01- பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஆவினில் நடை பெறும் ஊழல், ஊதாரித்தனத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் மாதம் காத்திருக்கும் போராட்டம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 6 ஆவது மாநில மாநாடு நாமக்கல் முத்துகாப்பட்டியில் கே.வரதராசன் நினைவரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.முத்துசாமி ஏற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் பி.ராமநாதன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.  வரவேற்புக்குழு தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளருமான பி.பெருமாள் வரவேற்றார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன்  மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், பால் உற்பத்தியாளர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஏ.ரங்கசாமி, வேலூர் பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டு றவு பணியாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

இம்மாநாட்டில், தமிழ்நாட்டில் தற்போது 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.5 வீதம்  உயர்த்தியுள்ளன. அண்டை மாநி லங்களில் கூட தற்போது ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5 முதல் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தொடர்ச்சியான பலகட்ட போராட்டத்தை நடத்தி யும், தமிழ்நாடு அரசு கண்டு  கொள்ளாதது பால் உற்பத்தி யாளர்கள் மத்தியில் இந்த அரசின் மீது கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. எனவே, கொள்முதல் விலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம்  உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42ம், எருமைப்பாலுக்கு ரூ.51ம் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு லிட்ட ருக்கு ரூ.3 வீதம் விற்பனை விலை யை குறைத்ததால் ஆவின் ஒன்றி யங்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும், ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டி யில் ஏற்றுவதற்கு முன்பு தரத்தை யும், அளவையும் குறித்து கொடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இது கடந்த 5 ஆண்டுகளாக அமலாக்கப்பட வில்லை. இது சரி செய்யப்பட வேண்டும். ஆவினில் நடைபெறும் ஊழல், ஊதாரித்தனத்தை தடுத்து நிறுத்தி நிர்வாக சீர்திருத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கிட உத்தர விட வேண்டும்.

ஒன்றிய அரசு பால், நெய், மோர் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சத வீதம் விதித்த ஜிஎஸ்டி வரியையும்,  பால் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களுக்கு 12 சதவீதத்தி லிருந்து 18 சதவீதமாக உயர்த்தி யிருக்கும் ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வேண்டும். ஆரம்ப  சங்கங்களில் பணி புரியும் ஊழி யர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் நிலையில் பணி  ஓய்வுக்குப்பின் புதிதாக இந்த வேலைக்கு ஆட்கள் வராத நிலை யில் ஆரம்ப சங்கங்கள் ஊழியர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்ற னர். இந்நிலையைப் போக்குவதற்கு ஆவின் ஒன்றியங்களிலிருந்து சம்பள உயர்விற்கான தொகை யை 50 சதம் கொடுத்து சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு செய்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக் கைகளை நிறைவேற்றக்கோரி வரு கின்ற அக்டோபர் மாதத்தில் சென்னையில் காத்திருக்கும் போரா ட்டம் நடத்துவது எனவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநாட்டில் 35 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு  செய்யப்பட்டது. மாநிலத் தலைவ ராக கே.முகமது அலி, பொதுச் செயலாளராக பி.பெருமாள், பொரு ளாளராக ஏ.எம்.முனுசாமி மற்றும் 11  பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். முடிவில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார். வரவே ற்புக்குழு செயலாளர் வி.சதாசிவம் நன்றி கூறினார்.