மதுரை, மே 21- சுத்தமான குடிநீர் கேட்டு மதுரை மாநகராட்சி டிவிசன் அலு வலகத்தை பொதுமக்கள் முற்று கையிட்டனர். மதுரை மாநகராட்சி 10-ஆவது வார்டு ஆரப்பாளையம் சோனை கோவில் தோப்பு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் மாசு படிந்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ள தாக இரண்டு தினங்களுக்கு முன் தெரிவித்தனர். இந்த நிலையில் வியாழ னன்று மீண்டும் தண்ணீர் மாசு படிந்து வருவதாக புகார் தெரி வித்து பொன்னகரம் பிராட்வே பகுதியில் உள்ள மாநகராட்சி டிவி சன் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செய லாளர் ராஜாராம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற் றும் பகுதிகுழு செயலாளர் வை. ஸ்டாலின், பகுதிகுழு உறுப்பினர் கள் ஏ.பாண்டி, ஜென்னி, வாலி பர் சங்க நிர்வாகிகள் நவீன், மயில் ராஜ், சிந்து மோகன், டிஆர்இயூ சர வணன் உள்ளிட்டோர் முற்றுகை யிட்டு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அங்கிருந்த மக்கள் கூறுகையில் தினசரி 2 குடம் தண் ணீருக்கு 25 ரூபாய் செலவிட வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வரி, வீட்டு வரி என்று வசூலித்து வரும் நிலையில் மக்கள் அடிப்படை தேவையான குடிநீர் என்பது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாசுபட்டு வருகிறது. அப்பகுதி களில் நோய்த்தொற்று ஏற்படு கிறது என்று தொடர்ந்து கூறி வரு கிறோம். ஆனால் அதை கண்டு கொள்ளாத போக்கில்தான் தற் போது மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. எனவே பெரும் நோய்த் தொற்று காலமாக உள்ளதால் சுகாதாரமான சுத்தமான குடி நீரை மாநகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் .மேலும் குழாயினை சீரமைக்கும் வரையில் லாரிகள் மூலமாக எங்கள் பகுதிக்கு குடி நீர் விநியோகம் செய்ய வேண் டும் என்றனர்.