சென்னை,டிச.15- ஒரே நாடு; ஒரே தேர்தல் விபரீத மசோதா வை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண் டும் என்று சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து சிபிஐ(எம்) மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்.எல்.) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத் தம்பி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு: நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற் றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்து வத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகை யிலும் மாநில உரிமைகளைப் மண் மேடாக்கும் வகையிலும், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்ப தற்கான சட்ட முன்வரைவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய வுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்ன தாக டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடுமையான ஆட்சேப ணையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசோதா வை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய திட்ட மிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவை அறி முக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும். நடைமுறை சாத்தியமில்லாத இந்த ஜன நாயக விரோத சட்ட மசோதாவை நிறை வேற்ற மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது. இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் ஆறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசியல் சட்டத்திருத்தங்களை செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை அவசியம். ஆனால், இரு அவை களிலும் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும் கொடுங்கோன்மையை கோலோச்சச் செய்யும் இந்த சட்டமுன்வரைவை கொண்டு வர மோடி அரசு துடிக்கிறது. அனைத்திலும் ஒற்றைத் தன்மையை திணிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவின் அராஜ கத்தின் ஒரு பகுதியே இந்த மசோதாவாகும். 2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு கொக்கரிக்கிறது. அப்படி யானால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டி யிருக்கும். மாநிலச் சட்டப்பேரவைகளில் எந்தக் ஒரு கட்சிக்கோ அல்லது கூட்ட ணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை யெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு சவால்கள் குறுக்கிடும் நிலை ஏற்படும். அவசரகோலத்தில் அள்ளித் தெளிப்பது போல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி யை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற வளா கத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் குரலெழுப்பி வரும் நிலையில், அதா னியை பாதுகாக்கவும், இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கோடும் ஒன்றிய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மை யையும் சிதைக்கும் ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளை சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரசேன் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொது மக்களும் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.