பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி - இடதுசாரிகள் கூட்டணி தான் வெல்லும்!
நிதிஷ் குமாரின் கட்சியை விழுங்கப் போகிறது பாஜக!
சிபிஎம் பீகார் மாநிலச் செயலாளர் லல்லன் சவுத்ரி பேட்டி
“பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலை யில், ஆர்ஜேடி, இடதுசாரிகள் - காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீகார் மாநிலச் செயலாளர் லல்லன் சவுத்ரி கூறினார். மதுரையில் நடைபெற்ற கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:- நிதிஷ்குமார் அரசுக்கு எதிரானக் கருத்துகள் மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி யில் ஊழல் மலிந்துவிட்டது. மக்களு க்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் அவரது கட்சியின் முன்னணி தலைவர்களுக்கே போய்ச் சேருகிறது. மதுவிலக்கு இருந்தாலும், ‘மது விலக்கு மாபியாக்கள்’ ஆதிக்கம் செலுத்துகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு நிதிஷ் - பாஜக அரசால் தீர்வு காண முடிய வில்லை. இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு அலைகின்ற னர். வருகின்ற தேர்தலை, இடதுசாரிக் கட்சிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். குறைந்தபட்சம் 20 இடங்களை இடதுசாரிகளுக்கு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு இடங்க ளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை பத்து தொகுதிகளில் போட்டியிடும். நிதிஷ்குமார் அரசு அனைத்து வகை களிலும் தோல்வியடைந்து விட்டது. அரசின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து கடந்த மார்ச் 20-ஆம் தேதி இடதுசாரிக் கட்சிகள் நடத்திய போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஏப்ரல் 15 முதல் மீண்டும் எங்களது போராட்டங்கள் தீவிர மடையும். ஜேடியுவைத் திருப்திப்படுத்துவ தற்காக சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பீகாருக்கு ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. இந்தத் திட்டங்கள் கடைசியில் ‘ஊழலின் ஊற்றுக்கண்ணாக’ மாறியுள்ளது. கடந்தாண்டு 20 பாலங்கள் இடிந்து விழுந்தன. ஜேடியு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பாஜக வின் வெறுப்புப் பேச்சு, வகுப்புவாத நட வடிக்கைகளால் சிறுபான்மை மக்களிட மிருந்து ஜேடியு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசியலில் எந்த அனுபவமும் இல்லாத தனது மகனை வெற்றிபெற வைக்க நிதிஷ்குமார் முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஜேடியுவை விழுங்குவதற்கான அனை த்து வாய்ப்பையும் பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வருகிறது. இவ்வாறு லல்லன் சவுத்ரி கூறி னார்.