கோவை, பிப்.16- மதவாத சக்திகளை அகற்று வதே முதன்மையான நோக்கமாக கொண்டு திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம் என மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரைவைகோ தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது, தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறுவது அரசியலமைப் பிற்கு விரோதமானது என உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பாஜக அரசுக்கு கொடுத்திருக்கக் கூடிய சம்மட்டி அடியாக நான் பார்க்கி றேன்” என்றார். திமுக கூட்டணியில் ஒருமித்த கருத்துடன் அனைத்து கட்சிகளும் இருக்கிறோம். 2024 இல் மீண்டும் மோடி வந்து விடக்கூடாது, மதவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிமுக கூட்டணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பே இல்லை. ஒருபோதும் கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம். ஏனெனில், மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக, மதிமுக கூட்டணி உருவாகியதே தவிர, சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.