சபரிமலைக்கு நடந்து செல்லும் குடியரசு தலைவர்
புதுதில்லி, மே 5 - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மே 18 அன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தர வுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இரண்டு நாள் பயண மாக தில்லியில் இருந்து 18-ஆம் தேதி கேரளம் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை செல்லும் முர்மு, பின்னர் நடைபயணமாக சபரிமலை ஐயப்பன் சன்னி தானம் செல்கிறார். இதை யொட்டி, தற்போதே பம்பை முழுமையாக போலீ சார் மற்றும் துணை ராணு வத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
வக்பு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
புதுதில்லி, மே 5 - ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதி ராக உச்ச நீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதுதொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்கும் வரை, வக்பு திருத்தச் சட்ட த்தை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, திங்க ளன்று (மே 5) இந்த வழக்கு கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அவற்றை புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க வுள்ள பி.ஆர். கவாய் தலை மையிலான அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்த உச்சநீதிமன்றம், விசாரணை யையும் மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம்!
சென்னை, மே 5 - தமிழகத்தில் பொறி யியல் படிப்புகளுக்கு மே 7 முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள் ளது. தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர மே 7 முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 5 - தமிழ்நாட்டில் 4 நாட் களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. செவ்வாய்க்கிழமை யும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாக தெரிவிக்கப்பட்டுள் ளது.