சடசட என்றே கொட்டும் மழையின்
சத்தம் காதில் இனிக்குது
டமடம என்றே இடிக்கும் ஒலியோ
டம்மென காதை அடைக்குது!
பளிச்பளிச் என்றே மின்னல் கீற்று
பார்த்திடக் கண்ணைப் பறிக்குது
துளித்துளி யாக வீழும் மழையோ
தோன்றிடும் அமிழ்தாய்ச் சுவைக்குது!
ஒய்ங்கொய் என்றே அடிக்கும் காற்று
உயர்ந்த மரங்களை முறிக்குது
மாய்ந்திடும் சத்தம் காதில் வந்து
மடமட வென்றே இடிக்குது!
எறுப்புக் கூட்டம் மழையை அறிந்து ஏறுது மேட்டில் சாரையாய்
இருக்கும் நீரில் கொர்புர் என்றே
எழிப்பிடும் தவளை ஓசையாய்!
சரசர வென்றே பாம்புப் புற்றில்
சட்டென ஊர்ந்து மறைந்தது
அரவினைக் கண்டே படபட என்றே
அடித்து நெஞ்சு உறைந்தது!
அழகு மயில்கள் தோகை விரித்து
ஆடி மேகம் உடைக்குது
உழவு வயலில் நண்டுகள் சேற்றை
வாரி வளையை அடைக்குது!
சிவ்சிவ் என்றே பறவை பறந்து
சிறியக் கூட்டை அடைந்தது
செவ்விய மனமோ அவைகளைப் பார்த்து
சிறந்த கவிதை படைத்தது!