விகடன் இணையதளத்தை முடக்கிய ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து “உரிமைக்குரல் எழுப்பும்” போராட்டத்தை அறிவித்தது. இதன்படி 50க்கும் மேற்பட்டோர் பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து, போக்குவரத்துக்கு இடையூறின்றி ஒன்றிய அரசுக்கு முழக்கமிட்டனர். இதனையடுத்து அனைவரையும் கைது செய்வதாக காவல்துறை அறிவித்தது. இதனால் தள்ளுமுள்ளு, மறியல் நடந்தது. அடாவடியாக நடந்து கொண்ட காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது விலங்கிடக் கூடாது என்பது இந்தியா வில் உள்ள விதி. உலகின் பல சிறிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசு அமெரிக்காவுக்கு அடிமை நாடு போல் நடந்து கொள்கிறது. இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப் படுத்திய விகடனின் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கி உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக, கேலிச்சித்திரத்தை அறிமுகப்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சியை விமர்சித்தவர் பாரதியார். ஒரு ஊடகவியலாளர் வெளியிட்ட செய்தி, கருத்துசித்திரம், கேலிச்சித்திரம், துணுக்கு செய்தி, புகைப்படத்திற்காக கைது செய்தால், முடக்கினால் அதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராடும். கலை, இலக்கியவாதிகள், ஊடகவாதிகள், ஜனநாயகவாதிகள் சுதந்திரமாக செயல்பட செங்கொடி இயக்கம் என்றும் துணை நிற்கும்.
நாட்டின் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க கருத்துச் சித்திரம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை முதலமைச் சர் பிரதிபலித்துள்ளார். ஆனால், பத்திரிகையாளர் சுதந்திரத்திற்காக போராடினால் காவல்துறை கைது செய்கிறது . இது என்ன நியாயம்?” என கேள்வி எழுப்பினார். இந்தப்போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணு கோபாலன், சேப்பாக்கம் திருவல்லிக் கேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.