திண்டுக்கல், ஜன.7- திண்டுக்கல்லில் மின்சா ரம் இல்லாத குடிசையில் இரு ளில் வாழும் மூதாட்டிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் சூரிய ஒளித் தகடுகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாநகராட் சிக்குட்பட்ட கக்கன் நகர் பகுதியில் உள்ள பாரதி ஹாஸ்டல் பள்ளி வாயில் அருகில் பெட்டிக்கடை அமைத்து கடந்த 40 ஆண்டு காலமாக மிட்டாய் வியாபா ரம் செய்து வருபவர் மூதாட்டி வேணியம்மாள். இவர் கணவனால் கைவிடப்பட்ட தனது அக்காவோடு பள்ளி சுற்றுச்சுவர் ஓரமாக குடிசை அமைத்து மின்வசதியின்றி வசித்து வருகிறார். இது பற்றி கேள்விப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முகநூல் சமூக வலைதளத்தில் உதவி கோரியது. இதனையடுத்து ஹுண்டாய் மோட்டார் ஒர்க் கர்ஸ் யூனியன் (சிஐடியு)வைச் சேர்ந்த பாஸ்கரன் தாமாக முன்வந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சூரிய மின்சக்தி தளவாட பொ ருட்களை சென்னையி லிருந்து அனுப்பி வைத்தார். இதனையடுத்து சூரிய சக்தி பலகையை வாலிபர் சங்க மாநில துணைச்செய லாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்டத் தலைவர் சிலம்பர சன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, திண்டுக் கல் நகரச் செயலாளர் பால முருகன், நகரத் தலைவர் கார்த்திக், மாவட்டத் துணைச் செயலாளர் சேது, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் வேணியம்மாள் குடிசைக்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.