tamilnadu

img

போட்டித் தேர்வு - என்ன படிக்கலாம்? - ஹரி

45 ஆயிரம் ரூபாயைக் கட்டிவிட்டு, ரசீதை வாங்கிய அடுத்த கணமே “எப்போது மெட்டீரியல கொடுப்பீர்கள்” என்ற வினாவை அந்தத் தேர்வர் தொடுத்தார். ரசீதை நீட்டிய பயிற்சி மையத்தின் ஊழியரோ, புருவத்தை உயர்த்தவில்லை. இந்த வினாயை அவர் அன்றாடம் எதிர்கொள்கிறவராக இருப்பார் போலிருக்கிறது. “சொல்வார்கள்” என்று மட்டுமே அவர் கூறினார். பணம் வசூலாக பிறகு, அவருடைய குரலில் மாற்றம் இருந்ததை தேர்வரும் உணர்ந்தார்.

வகுப்பிற்குள் நுழைந்தவர், ஆசிரியர் இல்லாமல் அவரவர் ஏதேதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து  விட்டு அமர்ந்தார். எங்கேயோ, எப்போதோ படித்த கதை  ஒன்று நினைவுக்கு வந்தது. விபத்தில் சிக்கிய ஒரு மனிதவள மேம்பாட்டு வல்லு நர் எமலோகத்திற்கு செல்கிறார். அன்று மிக குதூகல மாக இருந்த எமன் “எங்கே செல்ல விரும்புகிறாய், சொர்க்கமா, நரகமா.. சொல்” என்று கேட்டுவிட்டு பெரும்  சிரிப்பு சிரித்தாராம். “எனக்கெப்படி தெரியும்” என்று  வல்லுநர் சொன்னபோது, “ஓ... நீ அப்படி வருகிறாயா” என்று உருமிய ஏமன், “இன்று நரகத்திற்கு செல்... பார்த்துவிட்டு வா... நாளை சொர்க்கத்திற்கு சென்று பார்க்கலாம்... அப்புறம் நீயே முடிவு பண்ணிக் கொள்ளலாம்..” “புரோ... பேனா தர்றீங்களா” என்ற கேள்வியால் கதை இடையில் நின்றது. எடுத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் கதையில் மிதந்தார். நரகத்திற்குள் நுழைந்த வல்லுநருக்கு ஆச்சரி யமாக இருந்தது. அது கிட்டத்தட்ட மதிய நேரம்... உணவுக்காக சென்று கொண்டிருக்கிறார்கள்.. நல்ல உடை.. உணவறைக்குள் புகுந்தால் பெரும் ஆச்சரியம். அனைத்தும் இருந்தன. உண்ட மயக்கத்தால் மதிய உறக்கம். மாலையில் என்ன விளையாடலாம் என்று தேர்வு செய்யலாம். இவர் கோல்ஃப் விளையாடச் சென்றார். அதன்பிறகு மது விருந்து. அனைத்து சுவைகளும் நிரம்பிய இரவு உணவு. படுப்பதற்காகத் தரப்பட்ட படுக்கையைத் தனது வாழ்க்கையில் முதன்முறையாக அவர் பார்க்கிறார். காலையில் எமன் முன்னால் நிறுத்தப்படுகிறார். “இன்று நீ சொர்க்கத்திற்குப் போகலாம். நாளை நீயே முடிவு பண்ணிக்கலாம், எங்கு போவதென்று..”. என்றார். அவரோ, “அதெல்லாம் வேண்டாம். நான் நர கத்திலேயே இருந்து கொள்கிறேன். என்னுடைய கல்லூரி பேராசிரியரும் இங்கேதான் இருக்கிறார்” என்று  மறுத்தார். “சரி.. இவரைப் போய் நரகத்தில் விட்டு  விடுங்கள்” என்றார் எமன். எமகிங்கரர்கள் அழைத்துச்  சென்றனர். நரகத்தின் கதவுகள் திறந்தன. எட்டிப் பார்த்தா0ல், அனைவரும் கிழிந்த உடைகளோடு சாக்கடைகளில் புரண்டு கொண்டிருந்தார்கள். “என்ன இது... நேற்று இப்படி இல்லையே” என்றவரிடம், “நேற்று  உன்னை வேலைக்கு தேர்வு செய்து கொண்டிருந்தோம். இப்படித்தானே உன் பணிக்காலம் முழுவதும் செய்தாய்” என்று கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளி னார்கள்.  ‘இப்படித்தான் இங்கயும்’ என்று நினைத்து சிரித்தவாறே திரும்பியபோது, “இந்தாங்க” என்று  பேனாவைத் திருப்பித் தந்தார். அவரிடம், “பாடத் திட்டம் என்ன... புதிய புத்தகமா அல்லது பழைய புத்தகமா.. எதைப் படிக்க வேண்டும்” என்று கேட்டார். அவரோ, “ரெண்டையும் படிக்கச் சொன்னாங்க” என்றார்.  அந்தப் பயிற்சி மையத்தில் ஓராண்டாக பயின்று கொண்டி ருக்கும் சிலரோ, “நம்ம மையத்துல குடுக்குற புத்த கங்களைத்தான் படிக்கிறோம்” என்றனர். 

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

வாரியமோ, “எங்கள் பாடத்திட்டத்தைப் படியுங்கள்” என்றது. பாடத்திட்டத்தைப் புரட்டினால், இதெல்லாம் எங்கே கிடைக்கும் என்ற வினா புரட்டியெடுத்தது. பாடப்புத்தகங்களில் குறிக்கத் தொடங்கினால் எளிதாக இருந்தது. பள்ளிப் பருவத்திலேயே யாராவது இப்படி ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்படும் என்று சொல்லியிருந்தால் அப்போதே நினைவில் வைத்துக்  கொள்ளும் அளவில் படித்திருக்கலாமே என்று அந்தத்  தேர்வரின் மனதில் ஓடியது. இப்போது, மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. பள்ளிப் பருவத்தில் பெரும்பாலும் முந்தைய வகுப்பில் படித்ததை மறந்துவிட்டுதான் அடுத்த வகுப்பிற்குள்ளேயே நுழைகிறார்கள். இத்தனைக்கும் அதற்கும், இதற்கும் தொடர்பே உள்ளது. பழைய வகுப்புப் பாடங்களில் இருந்து வினாக்கள் வராது என்ற  தைரியம். இதையெல்லாம் மறந்துவிட்டு, பட்டப்படிப்பை யும் முடித்து விட்டு போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று வந்தால், ‘ஆறாம் வகுப்பில் படித்ததை நினை வில் வைத்திருக்கிறாயா’ என்று கேட்கிறார்கள். தேர்வர்கள் நிலைகுலைந்து நிற்கிறார்கள். 

தனது நிலை பற்றிய கவலையுடன் மீண்டும் வெளியேறப் போன தேர்வரின் காதுகளில் “மெட்டீ ரியல் எப்போ தருவீங்க”அந்த வினா வந்து விழுந்தது. அடுத்த வந்தவர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். “கிடா எப்ப வெட்டுவீங்க” என்று கவுண்டமணி கேட்டது  போலவே தேர்வருக்கும் இருந்தது. சிரித்து விட்டார். அப்போது அவரைப் பார்த்துக் கொண்டே வந்த ஒரு வர், “வாங்க டீ சாப்புடலாம்” என்று அழைத்தார். “என்னையா” என்று கேட்டுக் கொண்டே அவரோடு நடக்கத் தொடங்கினார். டீ சொன்னதும், “நீங்க எவ்வளவு நாளாப் படிக்கு றீங்க” என்று கேட்டுவிட்டார். அவரோ, “பரவா யில்லையே... சொல்றேன். கேளுங்க... இது நாலா வது வருஷம்... உங்கள மாதிரிதான் நானும் வந்தேன்.  முத ரெண்டு வருஷம் கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரிதான்.. பத்து சீனியர்ஸ் வகுப்புல இருந்தாங்க... வகுப்பு எடுக்கத் தொடங்குனவுடன அவங்க பதில்  சொல்வாங்க... அடுத்து என்ன வரும்னு சொல்லி ருவாங்க.. வகுப்பு அவங்களுக்கானதா மாறிடும்.. இப்ப லாம் ஒண்ணும் பண்ணிற முடியாதுன்னு நினைக்க வெச்சுடுவாங்க... போதும்.. வேற வேலைக்கு போயிர லாம்னு தோணும்.. சில பேரு போயிட்டாங்க..” “ம்ம்ம்... ஒரு செகண்டு என்னோட மனசுலயும் வந்து  போச்சு..” “எதுக்கு சிரிச்சுட்டு இருந்தீங்க...” தான் நினைத்த கதையைச் சொன்னார். இருவரும் சேர்த்து சிரித்தனர். ஃபீஸ் வாங்குன பிறகு, அவரோட முகம் மாறுனதயும் சொன்னார். “விடுங்க... அவரு எனக்கு  ஒரு வருஷம் சீனியரு இங்க” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவரே தொடர்ந்தார்... “வகுப்புக்கு வர்றதுக்கு முன்னாடியா நாம ஆரம்பிச்சுரனும்.. பள்ளிப்பாடங்கள திருப்பிரனும்.. பாடங்களுக்குப் பின்னாடி உள்ள வினாக்களுக்கு விடை கண்டுபிடிக்கனும்.. படிக்குறப்ப வாங்கிருந்த கைடுல கூடுதல் வினாக்கள் இருக்குமே.. அதையும் படிச்சுரனும்.. செய்தித்தாள்... தொலைக்காட்சி செய்திகள், குறிப்பான சில புத்தகங்கள், பழைய வினாத்தாள்கள்னு பாத்து வெச்சுரனும்...”

“போதுமா..?”
“நான் சொல்றது... வகுப்புக்கு சேர்றதுக்கு முன்னாடி 
இதெல்லாம் செஞ்சுரனும்..”
“இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ்லாம் ஆகுறதுக்கு UPSCனு ஒரு தேர்வு சொல்றாங்களே... அதுக்கும் இப்படித்தானா...”
“எல்லாப் போட்டித் தேர்வுக்குமே UPSCதான்...”
“இல்லயே TNPSC. SSC, RAILWAY. BANKனு தான வெச்சுருக்காங்க..”
“நான் படிக்குறதுக்கு சொன்னேன்... அத இப்படிச் சொல்லலாம்.. U, P, S & C”
“வேற மாதிரிச் சொல்றீங்களே...”
“ஆமா.. இன்னிக்கு நேரமாச்சு... அடுத்து சீக்கிரமாவே சந்திச்சுரலாம்... அந்த நாலையும் பாத்துரலாம்.. பை.. பை..”