tamilnadu

img

இந்திய மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளும் மோடி அரசு

புதுதில்லி, ஜன.9- மோடியின் புதிய இந்தியா என்பது இந்துத்துவா-கார்ப்பரேட்டுகள்-ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் கலவையேயாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில 23ஆவது மாநாடு, கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகரில் ஜனவரி 2-4 தேதிகளில் நடைபெற்றது. மாநாடு, தோழர்கள் கே.வரதராசன்-பாலப்பா நகரில் நடைபெற்றது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக 300 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் உட்பட 500 பேர் மட்டுமே துவக்க நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்தகள்., அர சியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி மற்றும் பி.வி.ராகவலு மாநாட்டில் பங்கேற்றார்கள்.

பிரகாஷ் காரத்

மாநாட்டில் பிரகாஷ் காரத் துவக்கவுரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “மோடியின் புதிய இந்தியாவின் மூன்று தூண்கள் எனப்படுபவை இந்துத்துவா, கார்ப்பரேட்டுகள் மற்றும் ஏகாதிபத்தியம் என்பவைகளாகும். உலக மக்களைக் கடுமையாகப் பாதித்த  கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் முதலாளித்துவ நாடுகளுக்கும், சோசலிச நாடுகளுக்கும் இருந்த வேற்றுமையை கொரோ னா மிகவும் தெளிவாகக் காட்டிவிட்டது. சின்னஞ்சிறிய நாடான கியூபா கோவிட்-19க்கு எதிராக ஆறுவிதமான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, வளர்த்தெடுத்திருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந் தொற்றானது பணக்கார முதலாளித்துவ நாடுகளுக்கும் வளர்முக நாடுகளில் வாழும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளையும் விரிவு படுத்தியிருக்கிறது. முன்னேறிய முதலாளித் துவ நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடுப்பூசி களைச் செலுத்தியுள்ள அதேசமயத்தில், ஏழை  வளர்முக நாடுகளில் உள்ள மக்களுக்கு,  அறிவுசார் சொத்துரிமைகள் சட்டத்தைக் காட்டித் தடுப்பூசிகளை அனுப்பிவைப்பதற்குக் கூட அவை மறுத்துவிட்டன.    கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து வேலையின்மை  மிகவும் உச்சத்திற்குச் சென்று மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டுள் ளது. உலகம் முழுதும் ஆட்சிகளில் உள்ள வலது சாரி அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டுள்ளன. இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களும் அதன் ஓர் அங்கமாக மாறிவிட்டனர்.

மோடி அடிக்கடிப் பேசிவரும் “புதிய இந்தியா” என்பது இந்துத்துவா பார்வையுடன் கூடிய கார்ப்பரேட் ஆதரவு, ஏகாதிபத்திய ஆதரவு இந்தியாவேயாகும். புதிய நாடாளு மன்றம் கட்டிமுடிக்கப்பட்டபின், இப்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுவிடும்.  உண்மையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தை நடத்தி டவே விரும்பவில்லை. ஜனநாயகரீதியாக விவாதத்திற்கு உட்படுத்தாமல் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அனைத்தையும் நிறைவேற்றவே விரும்புகிறார்கள். அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும்கூட அருங்காட்சியகத்தில் வைத்திடவே விரும்புகிறார்கள். இவர்கள் மக்களுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுத்துள்ள அதே சம யத்தில் அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வர லாற்றின் சக்கரங்கள் உருண்டுகொண்டிருக்கின்றன. எனினும் மிகவும் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. சிலியில் இடதுசாரி களின் வேட்பாளரான முன்னாள் மாணவத் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி  பெற்றிருக்கிறார். ஐம்பது ஆண்டு களுக்கு முன்னால் இந்த சிலி நாட்டில்தான் முதன்முறையாக நவீன தாராளமய சீர் திருத்தக்கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் இந்துத்துவா-கார்ப்ப ரேட்டுகளின் தாக்குதலுக்கு எதிராகப் போராட்டங்கள் அதிகரிக்கத்தொடங்கி யுள்ளன. அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், குடியுரிமைத் திருத்தச்சட்டம் கொண்டுவரப் பட்டதற்கு எதிராகவும் பெரிய அளவில் இயக்கங்கள் நடைபெற்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்-தொழி லாளர்கள் ஒன்றுபட்ட போராட்டம் வரலாறு படைத்திருக்கிறது. இந்துத்துவா-முதலாளித்துவக் கட்சி களுக்கு எதிராக ஒரு மாற்றைக் கட்டி எழுப்ப வேண்டிய அவசியமாகும். இந்தப் பின்னணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு சுயேச்சையான சக்தியாக வலுப்படுத்தி உயர்த்த வேண்டியதும் அவசியமாகும். இந்தப்  பிரச்சனை மீது வரவிருக்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு உரிய உத்திகளை மேற்கொள்ளும். இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.

பிரதிநிதிகள் மாநாடு

பிரதிநிதிகள் மாநாட்டில் 246 பிரதிநிதிகளும் 47 பார்வையாளர்களும் 24 மாவட்டங்களி லிருந்து வந்து பங்கேற்றனர். மாநில செயலாளர் உ.பசவராஜ் செயலர் அறிக்கையை சமர்ப்பித்தார். 74 பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றனர். மாநிலச் செயலாளரின் தொகுப்புரைக்குப்பின்பு அறிக்கை ஒருமன தாக நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் 34 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய மாநிலக்குழு உறுப்பினர்கள் கூடி  மீண்டும் உ. பசவராஜ் அவர்களை மீண்டும் மாநிலச் செயலாளராகவும், 12 உறுப்பினர்கள் கொண்ட மாநிலச் செயற்குழுவையும் தேர்வு செய்தார்கள். மாநிலக்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்ட முதுபெரும் தோழர்கள் வி.ஜே.கே.நாயர், ஜி.என்.நாகராஜ், நித்யானந்தசாமி மற்றும் கே.சங்கர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள். மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு நிறைவுரையாற்றி னார்.