சென்னை,ஜன.23- தமிழகத்தில் ஒமைக்ரான் நோய் தொற்று அதிகமாகி வரும் சூழலில் கல்லூரி மாணவர் களுக்கான செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து இந்திய மாணவர் சங்க பிரதிநிதி களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஜனவரி 21 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன். மாநில துணைச்செயலாளர் பிரகாஷ் பங்கேற்றனர். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சரிடம் வகுப்பறைக்கு மாற்று ஆன்லைன் கல்வி இருக்க முடியாது. மாணவர்களை கல்வி நிலையங்களை நோக்கி கொண்டுவர வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆகவே சுழற்சிமுறையில் நேரடி தேர்வு களை நடத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அமைச்சர் தற்போது தொற்று அதிகமாக இருப்பதால் தேர்வை நேரடியாக நடத்துவது நோய்த் தொற்றுக்கு வழி வகுக்கும்.
ஆகவே இந்தத் தேர்வு மட்டும் ஆன்லைனில் நடத்தலாம். பிப்ரவரியில் தொற்று குறைந்தவுடன் அடுத்த செமஸ்டர் நேரடி தேர்வாகவே நடத்துவோம். கல்வி நிலையங்களையும் உடனடியாக திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்வோம். இம் முடிவு களுக்கு ஆதரவு நல்க வேண்டும் என கூறி னார். அதன் பின்பாக ஆன்லைன் தேர்வில் கடந்த காலங்களில் இருந்த பல்வேறு சிர மங்கள் இல்லாத அளவிற்கு ஒரே மாதிரி யாக மாநிலம் முழுவதும் தேர்வை நடத்து வோம் எனக் கூறினார். அதன் பின்னர் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், இந்திய மாணவர் சங்கத்தின் நிலைபாடு குறித்தும் அமைச்ச ரோடு மாணவர் சங்கம் விவாதித்த விவரங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் விளக்கி னார். உயர்கல்வித்துறை அமைச்சரிடம் மாணவர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு வருமாறு:
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 35 முதல்வர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதோடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசு கல்லூரி களுக்கு சொந்த கட்டிடங்களை உருவாக்கித் தர வேண்டும், அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தருவதோடு, புதிய அரசு விடுதிகளை திறக்க வேண்டும். கொரோனா பேரிடர் காரணமாக இடைநிற்றல் அதிகமாகி குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் என ஏராளமான மாண வர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளி யேறியுள்ளனர். ஆகவே போதிய பாது காப்பு ஏற்பாடுகளோடு கல்விநிலையங் களை அரசு திறக்க வேண்டும். கல்வித்துறை சார்ந்த அரசின் அறிவிப்புகள் தாமதமில்லா மல் உடனே கல்வி நிலையங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.