திருநெல்வேலி, ஜூலை 7- கூடங்குளம் அருகே நடுக் கடலில் நடந்த மோதலில் நாட்டுப்படகு மீது விசைப் படகை மோதியதில், கடலில் விழுந்து மாயமான மீன வரை கடலோரப் பாது காப்புப் படையினர் தேடி வரு கின்றனர். திருநெல்வேலி மாவட் டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி பகுதி யைச் சேர்ந்த மீனவர்கள் கட லுக்குள் சென்று மீன்பிடித்து விட்டு வெள்ளிக்கிழமை அதி காலை கரைக்குத் திரும்பிக் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சில மீனவர் களின் வலைகள் கடலில் தவறி விழுந்துள்ளது. இதைத் தேடி மூன்று நாட்டுப்படகுகளில் கூத்தங்குழியை சேர்ந்த மீனவர்கள் டிலைட் ( 50), வினோ (35), சகாயம் (47), அஜித், டைசன் (25), சுரேஷ் ஆகியோர் கடலுக்குச் சென் றனர். சுமார் ஆறு நாட்டிக்கல் தூரத்தில் கூத்தங்குழி மீன வர்கள் கடலுக்குள் வலை யைத் தேடி கொண்டிருந்த னர். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி சின்னமுட் டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கும், கூத்தங் குழி பகுதி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. தகராறு முற்றியதால் விசைப்படகை இயக்கி வந்த சின்னமுட்டம் பகுதி மீன வர்கள், டிலைட் இயக்கிக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீது மோதியதாகக் கூறப்படு கிறது. இதில் நிலைதடுமாறி டிலைட் கடலுக்குள் விழுந் தார். மாயமான அவர் கதி என்ன? என்பது தெரிய வில்லை. இந்த மோதலில் கூத்தங்குழியை சேர்ந்த மீனவர்கள் வினோ உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர். நடுக்கடலில் விழுந்து மாயமான மீனவர் டிலை ட்டை தேடும் பணியில் கட லோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் ராதாபுரம் இன்ப துரை எம்.எல்.ஏ. சனிக் கிழமை மாலை கூத்தங்குழி கிராமத்திற்கு வந்தார். அங்குள்ள பங்குத்தந்தை ராஜன் இல்லத்தில் மீனவ மக்களை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மீனவர் டிலைட் வீட்டுக்கு சென்று, அவரு டைய தாயார், மனைவி மற் றும் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினார். சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை கூறுகையில், “மாயமான டிலைட்டை தேடி கண்டுபிடிக்குமாறு கட லோரப் பாதுகாப்புப் படை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இச்சம்ப வத்துக்கு காரணமான வர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். டிலைட்டை தேடி கண்டு பிடிக்க முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அனைத்து உதவிகளையும் அரசு மூலம் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்” என்றார். மேலும் திருநெல்வேலி யில் முகாமிட்டுள்ள சட்டம் -ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளியை, சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மேற்கண்ட சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளி களை உடனடியாக கைது செய்து, விசைப்படகுகளை யும் பறிமுதல் செய்ய வேண் டும் என வலியுறுத்தியுள்ளார்.