tamilnadu

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை அடுத்த வாரம் முதல்வர் அடிக்கல்

சென்னை, மார்ச் 13- சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் அடிக்கல் நாட்ட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 10 கோடியே 10 லட்சத்து 94,834 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தொற்றின் எண்ணிக்கை தற்போதுமளமளவென சரிந்து பூஜ்ஜியத்தைநோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவ தற்கான அனைத்து டெண்டர் பணிகளும் முடிவடைந்து விட்டன. பன்னோக்கு மரு த்துவமனை கட்டுவதற்கு அடுத்த வாரம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அங்கு பல்வேறுவிதமான தடுப்பூசிகளை உரு வாக்கும் ஆராய்ச்சிக்கான மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் 87 விழுக்காட்டினருக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதனால் எத்தனை வைரஸ் வந்தாலும், கவலைப்பட தேவை யில்லை. தமிழக முதல்வர், அவர் அவராகவே செயல்பட்டுக் கொண்டி ருப்பதால்தான் உள்ளாட்சி, நகராட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் 90 விழுக்காட்டினருக்கு மேல் வெற்றியை திமுக பெற்றுள்ளது. எனவே, முதல்வர் வேறு யாரைப் போலவும் செயல்பட வேண்டி யது இல்லை

மாணவர்கள் பத்திரமாக மீட்பு

உக்ரைனில் இருந்து 1,921 மாண வர்களில், 1,890 மாணவர்கள் தமிழ கத்துக்கு பத்திரமாக மீட்டு வரப்பட்டு ள்ளனர். இதில் 1,524 மாணவர்கள் தமிழக அரசின் செலவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். 366 மாணவர்கள் அவ ர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பி உள்ளனர். 31 மாணவர்கள் உக்ரைனிலும், அக்கம்பக்கத்தில் உள்ள நாடுகளிலும் பாதுகாப்பாக இருப்ப தாகத் தெரிவித்துள்ள னர். இவ்வாறு அமைச்சர்  தெரி வித்துள்ளார்.