தென்னாபிரிக்க தலைநகரான ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் வருகை புரிந்தனர். முதல் நாள் தென் ஆப்பிரிக்காவின் மிக உயரிய விருதான The Order of south africa விருதை அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் கிற்கு வழங்கி கவுரவித்தார்.