tamilnadu

img

ஜிஎஸ்டி அதிரடிப்படை பாஜகவின் புரோக்கரா? - பி.ஆர்.நடராஜன் கேள்வி

அரவக்குறிச்சி, ஜுன் 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றிய குழு சார்பில் பேருந்து நிலையம் முன்பு அரசியல் விளக்க- நிதி யளிப்பு  பொதுக்கூட்டம் நடை பெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். கட்சியின் அரவக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர் கே.வி. கணே சன் வரவேற்றுப் பேசினார். கட்சியின்  கோவை நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர். நடராஜன் கட்சி வளர்ச்சி  நிதியாக ரூபாய் ஒரு  லட்சத்தை பெற்று கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களில் தொழில் பாதிப்பு குறித்து அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில் ஆலோசனை நடை பெற்றது. தொழில் பாதிப்புக்கு கார ணம் பஞ்சு விலை நிலையற்று இருப்பது தான். மேற்கு மாவட்டங் களில்  தொழில்கள் கடுமையாக முடங்கிப்போய் உள்ளன. ஒன்றிய அரசு நிமிடத்திற்கு நிமிடம் பஞ்சு விலையை உயர்த்தி வருகிறது.

 ஒன்றிய அரசிடம் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு உள்ளது. அதேபோன்று காட்டன் கார்ப்பரேஷன் ஆப் தமிழ்நாடு என்று  ஒரு அமைப்பை தமிழக அரசு துவங்கிட வேண்டும். ஜிஎஸ்டி  வரியை குறைத்திடவும் தொழிற்சங்கங்களின் ஆலோச னைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. அதன் அடிப்படையில் தமி ழக தொழில்துறை அமைச்சரிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது. அவரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அமைப்பின் மூலம் தமிழ கத்திற்கு நேரடியாக பஞ்சுகளை இறக்குமதி செய்திட வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்காவது பஞ்சின் விலை உயர்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி மூலம் உழைப்பாளர்களிடம் சுரண்டுகிறது. கடுமையான வரியை நிர்ண யித்து தொழில் செய்யவிடாமல் தொழில்களை நசுக்கிவருகிறது.  இதுவும் கோவை, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழில்கள் பாதிப்பிற்கு ஒரு காரணமாகும்.  அம லாக்கத்துறை இருப்பது போல ஜிஎஸ்டி அதிரடிப்படை என்று ஒன்று உள்ளது. இந்த அதிரடிப்படை தொழிலதிபர்கள், வியாபாரிகள் யாரேனும் ஜிஎஸ்டியில் தவறு செய்யும் பட்சத்தில், அதனை ஆய்வு செய்து கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல். அப்பகுதியில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகளிடம் அந்த தொழிலதிபர் பற்றிய தகவல்களை தெரிவித்துவிடுகின்றனர்.  இதனை கையில் எடுத்துக் கொண்டு பாஜகவினர் அந்த தொழில் அதிபர் அல்லது வியாபாரியிடம் சென்று பேரம் பேசி மிரட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அதிரடிப்படை பாஜக கட்சி க்கு புரோக்கராகவும் செயல்படு கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் அதிக அளவில் முருங்கை உற்பத்தி விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் முருங்கை உற்பத்தி விவசாயத்தை பாதுகாக்க முருங்கையின் மதிப்பை கூட்டிட விற்பனையை அதிகளவு செய்திட வும், அரவக்குறிச்சி வட்டார பகுதியில் முருங்கை சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். திருப்பூர் கோவை மாவட்டங் களில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. தமிழக அரசு ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இதனால் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகளையும் தென்னை விவசாயம் சார்ந்த தொழிலையும் பாதுகாக்க முடியும். தமிழக ஆளுநர்  துறையில்லா அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பதை ஏற்க மறுத்து கடிதம் எழுதுகிறார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒருவர்மீது வழக்குப் பதிவு செய்தால் மட்டும் அவர் குற்றவாளி கிடையாது. நீதி மன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கி னால் தான் குற்றவாளியாகக் கருதப்படுவார். 

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்காரி, மீதும் வழக்கு  இருக்கிறது. ஆளுநர் ரவி ஒன்றிய அரசுக்கும், பாரத பிரதமருக்கும், அவர்கள் மீது வழக்கு இருக்கிறது; அவர்களை பதவி நீக்கம் செய்ய சொல்லி கடிதம் எழுதுவாரா என்ற கேள்வியை நாங்கள் எழுப்பு கிறோம். கொரோனா நேரத்தில் அமெரிக்கா, இந்திய நாட்டின் பொருட் களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் வரி விதித்துள்ளது. அதே போன்று இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் கூடுதல் வரியை விதித்தது. தற்பொழுது அமெரிக்காவிற்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க முதலாளிகளுக் கும் அவர்களின் இலாப நோக்கத்திற் காகவும் அந்த கூடுதல் வரியை இந்திய அரசு தற்போது ரத்து செய்துள் ளது. அதற்காகத்தான் மோடி தற் போது அமெரிக்கா சென்றுள்ளார்.  இவ்வாறு அவர் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் பேசினர்.