சென்னை, பிப்.25- மார்க்சியம் குறித்த தனது கருத்தை திரும்பப் பெறாவிடில், ஆளுநர் மாளிகை சிறைக்கூடமாக மாறும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்ச ரித்துள்ளார். மார்க்சியம் குறித்து தவறாகவும், அறிவுக்குப் புறம்பாகவும் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, வருத்தம் தெரி விக்க கோரி சனிக்கிழமையன்று (பிப்.25) ராஜ்பவன் அருகே சின்னமலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சென்னை மாவட்டக் குழுக்கள் நடத்திய இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: மார்க்சிசத்தை விமர்சிப்பதில் தவ றில்லை. ஆளுநர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்வதைத்தான் கண்டிக்கிறோம். சோசலிசம், பொதுவுடமை என்ற வார்த்தைகளுக்கான தத்துவம்தான் மார்க்சியம். சோசலிசத்திற்கு இலக்க ணம் படைத்தவர் காரல் மார்க்ஸ். அரசி யல் சாசனத்தின் முகவுரையில் மதச் சார்பற்ற சோசலிச ஜனநாயக குடியரசு இந்தியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோ தமாக ஆளுநர் பேசுகிறார்.
எதையாவது உளறுவதா?
இந்தியாவை சிதைத்தது மார்க்சி யமா? வர்ணாசிரமமா? என்பதை ஆளுந ருடன் எங்கு வேண்டுமானாலும் விவா திக்க தயாராக இருக்கிறோம். ஆளுநர் மாளிகைக்கு முன்பே கூட, கட்சியின் கடைக்கோடி தோழனோடு விவாதித்து ஆளுநரால் வெற்றி பெற முடியுமா? ஏனெ னில் உங்களிடம் பொய் மூட்டைகள் மட்டுமே இருக்கிறது. பொதி சுமைப்பதை போல் யாரோ சொன்ன தத்துவத்தை சுமக்கிறீர்கள். யாரும் கேள்வி கேட்க முடியாத, எதிர்த்து கருத்து சொல்ல முடி யாத இடத்திற்கு சென்று எதையாவது உளறிவிட்டு வருகிறீர்கள். நான் சொல்வதெல்லாம் மார்க்சியம் அல்ல. என்னை விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. என்னை மேலும் மேம் படுத்த பலபேர் தேவைப்படலாம் என்றார் மார்க்ஸ். வாழ்நாள் முழுவதும் வறுமை யில் உழன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக் காக உழைத்தவர். தனது குழந்தை இறந்தபோது, சவப்பெட்டி வாங்கக் கூட அவரிடம் பணம் இல்லை. நாடற்ற குடி மகனாக வாழ்ந்தவர். சோசலிசம், பொது வுடமை என்பது உழைப்பாளி மக்களின் பொன்னுலகம்.
பூமியை வளப்படுத்தியவன் தொழிலாளி
மார்க்சியம் எழுதி 150 ஆண்டு களுக்கு மேலாகி விட்டது. இன்றைய நவீன யுகத்திலும், அவரின் கருத்துக் கள் புதுமையாக இருக்கிறது. மூல தனம், உற்பத்திக் கருவிகள் மட்டுமே பொருளை உற்பத்தி செய்யாது. தொழி லாளியின் உழைப்பு சேரும்போதுதான் உற்பத்தி நடக்கிறது. உலகத்தை உற் பத்தி செய்கிற படைப்பாளி தொழி லாளிதான் என்றார் மார்க்ஸ். இந்து மதம் படைப்பு கடவுள் பிரம்மா என்றது. மார்க்ஸ் சொன் னார், தொழிலாளிதான் படைப்பு கட வுள் என்றார். தொழிலாளி இல்லா விட்டால், 5ஆயிரம் ஆண்டு வர லாறு கொண்ட இந்த பூமி, வெறும் பாறைகளாக மட்டுமே இருந்திருக் கும். இந்த நவ உலகத்தை படைத்தி ருப்பவன் தொழிலாளி என்று சொன்னவர் மார்க்ஸ். இதிலிருந்து முதலாளி எப்படிச் சுரண்டுகிறான் என்ற விளக்கத்தை கொடுத்தார். இதையெல்லாம் ஆர்.என்.ரவிக்கு சொல்லி கொடுக்காமல், ஆர்எஸ்எஸ் டுடோரியல் கல்லூரியில் பயிற்சி கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். சமூகம் காரல் மார்க்சை மறு வாசிப்புக்கு உட்படுத்தும் வேலை யை ஆளுநர் செய்திருக்கிறார். மக் கள் கிராமங்கள் தோறும் மார்க்சி யத்தை படிக்கும் வாய்ப்பை உரு வாக்கி உள்ளார். மார்க்சியம் அழிக்க முடியாதது. இந்தியாவை பார்க்கா மலே, 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் சமூக அமைப்பு எப் படி உள்ளது என்பதை படக்காட்சி யை போல எழுதி இருக்கிறார் காரல் மார்க்ஸ். மார்க்சியம் இந்தியா வை சிதைக்கவில்லை. மேம்படுத்தி யிருக்கிறது.
வருணாசிரமம்தான் சிதைத்தது
காங்கிரஸ் கட்சியும், காந்தியும் பிறப்பதற்கு முன்பே, விடுதலைப் போராட்டம் அரும்புவதற்கு முன்பே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மொழி, சாதியால் பிளந்து கிடக்கிற உழைப்பாளி வர்க்கம் திரண்டு போராடி வெற்றி பெறும் என்று கணித்தவர் மார்க்ஸ். விடு தலைப் போராட்டத்திற்கும் உரம் ஊட்டியவர் மார்க்ஸ். சாதி, மதம் என்ற வர்ணாசிரமம் என்ற, தத்து வத்தின் பெயரில் இந்தியாவை சிதைத்தவர்கள் கொடுமைக்கார சனாதனிகள், ஆர்எஸ்எஸ்-காரர் கள். மார்க்சியத்தை அடக்க நினைத் தவர்கள்தான் அடங்கிப் போயி ருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது ஆர்எஸ்எஸ். சாவர்க்கர், பிரிட்டிஷ் அரசுக்கு சேவை செய்கிறோம் என்று கூறி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆர்எஸ்எஸ் செயல்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தை தூண்டி விட்டவர் என்பதால் காரல் மார்க்ஸ் மீது கோபப்படுகிறார்கள். அடிமைப் புத்தியில் பிறந்துள்ள ஆர்எஸ்எஸ், அதன் வாரிசாக உள்ள ஆர்.என். ரவி, மார்க்ஸ் குறித்து பேச அருகதை யில்லை. கற்பூர வாசனை எதற்கோ தெரியுமா? என்பார்கள்.
ஆளுநருக்கு தகுதி இல்லை
மார்க்ஸ் யார், மார்க்சியம் என் றால் என்ன என்பதை விளக்கி குழந்தைகளுக்கான எழுத்தாளர் ஆதிவள்ளியப்பன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘இளையோருக்கு மார்க்ஸ் கதை’ என்ற புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். அதை படித்து ஆளுநர் மார்க்ஸ், மார்க்சி யத்தை பற்றி படித்து புரிந்து கொள் ளட்டும். ஆளுநர் ஆளுநராக செயல்படாமல், அரைவேக்காட் டுத்தனமான அரசியல்வாதியாக செயல்படக் கூடாது. ஆயிரமாண் டின் தலைசிறந்த அறிஞர் காரல் மார்க்ஸ் என்று பிபிசி அறிவித்துள் ளது. அவரை விமர்சிக்கிற தகுதி ஆளுநருக்கு அறவே இல்லை. தமிழ்நாட்டை கேவலப்படுத்தி, சட்டமன்றத்தை அவமானப்படுத்தி உள்ளார். அவரது பாணியில் நாங்க ளும் இறங்கினால் ஆளுநர் மாளிகை சிறைக்கூடமாக மாறும்; நீங்கள் வெளியே வர முடியாது; வீதியில் செல்ல முடியாது. எனவே, ஆளுநர் தனது அவதூறு கருத்தை திரும்பப் பெறாத வரை, மாநிலத் தின் எந்த மூலைக்கு சென்றாலும், அவருக்கு செங்கொடி இயக் கத்தை சார்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டுவார்கள்.
பட்டாளி வர்க்கத்திற்கே இறுதி வெற்றி
உலகத்தில் எத்தனையோ தத்துவங்கள், மதக் கருத்துக்கள், பொருளாதார சிந்தனைகள் உரு வாகி இருக்கின்றன. ஆனால், மனி தனை வாழவைக்கிற மகத்தான மார்க்சிய தத்துவத்திற்கு நிகராக இதுவரை எதுவும் உருவாக வில்லை. மார்க்சின் மூளை, அது ஒரு புரட்சியின் மூளை என்று அறி ஞர் சாமிநாத சர்மா குறிப்பிட்டுள் ளார். உலகத்தில் யார் போராடி னாலும், அவர்களுக்கான ஆயுதமாக, உந்து சக்தியாக மார்க்சியம் உள்ளது. ஒரு தத்துவம் வாழ்வது, வளர்வது குறிப்பிட்ட காலத்திற்குள் நிகழாது. முதலாளித்துவ சமூகம் 2ஆயிரம் ஆண்டு வரலாறு கொண் டது. மார்க்சிய தத்துவம் 200 ஆண்டு வரலாறு கொண்டது. முதலா ளித்துவ சிந்தனை, கருத்தியல், இலக்கியம், அரசியல் என அனைத் தைதயும் தவிடுபொடியாக்கி மார்க்சியத் தத்துவம் முன்னேற வேண்டியுள்ளது. எனவே, அதன் வளர்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் இருக்காது. லெனின் கூறியபடி ஓரடி முன்னே றினால் ஈரடி சறுக்கும். மார்க்சியம் என்பது எதிர்நீச்சல் அடிப்பது. நெருப்பாற்றை நீந்திச் செல்வது. எதிரி முகாம்களை வீழ்த்தி அங்கு லம் அங்குலமாக முன்னேற வேண் டிய தத்துவம். எனவே, இறுதியில் முதலாளித்துவம் வீழும், பாட்டாளி வர்க்கமே வெல்லும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை), எல். சுந்தரராஜன் (வடசென்னை) ஆகி யோர் பேசினர்.
மேற்கத்திய பாசிசத்தை இங்கு அறிமுகப்படுத்தியது ஆர்எஸ்எஸ்
இந்த போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மனித குல விடுதலைக்கு வித்திட்ட காரல் மார்க்சையும், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வினையும் ஆளு நர் அரைகுறையாக புரிந்து கொண்டு அவதூறாக, அறிவிலித்த னமாக பேசியிருக்கிறார். “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் / இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் / வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி / வர வேண்டும் இந்நாட்டில் பொது வுடமை” என கவிஞர் கண்ணதாசன் மார்க்சியத்தை விளக்கி இருக்கி றார். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக ஆளுநர் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மூஞ்சே, 1931 ஆம் ஆண்டு இத்தாலி சென்று 15 நாட்கள் தங்கி, சர்வாதிகாரி முசோலினி, அவரது படைத்தள பதிகளை சந்திக்கிறார். அதன்பின் இந்தியா வந்த அவர், இத்தாலி யில் ராணுவத்திற்கும், முசோலினி படைக்கும் கொடுப்பது போன்ற பயிற்சியை, ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றார். அந்த மேற்கத்திய பாசிச தத்துவத்தை இந்தியாவில் அறி முகப்படுத்தியது ஆர்எஸ்எஸ். ஆனால், மக்களை வாழ வைக்கும் மார்க்சியத் தத்துவத்தை, `ஹிட்லரின் வாரிசாக உள்ள ஆளுநர் விமர்சிக்கிறார். ஆளுநர் தனது அவதூறு கருத்திற்கு வருத்தம் தெரி விக்கும் வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்றார்.