சென்னை,அக்.16 வாழ்வாதார கோரிக்கை போராட்ட ங்களுடன் அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழி யர்களுக்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென்மண்டல தலைவர் க.சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு ஊழியர் மகாசம் மேளனத்தின் மாநில மாநாடு சென்னை யில் சனிக்கிழமை (அக். 15) நடை பெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசியதாவது; இன்சூரன்ஸ் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என்னதான் போராடி னாலும் 50 லட்சம் மத்திய அரசு ஊழி யர்கள் அசைந்தால்தான் அரசிற்கு மிகப்பெரிய நிர்ப்பந்தம் அளிக்க முடியும். மத்திய தர அமைப்பு களிடையே சமூக இணைப்பு தேவைப் படுகிறது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் மத்திய தர ஊழியர்களை சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தும் போக்கை கடந்த 30 ஆண்டுகளாக உருவாக்கி வருகிறது. ஏனென்றால் அரசு மருத்துவமனைகளுக்கு நாம் செல்வதில்லை. கோவிட் காலத்தில் சென்றிருக்கலாம். ரேசன் கடை வரிசையில் நிற்பதில்லை. சமூகத்தின் அவலங்களை, சாமானிய மக்களின் வலிகளை உணர்ந்து கொள்வதில்லை. பணியாற்றும் துறைகள் நம்முடைய அடையாளமாக சுருங்கி விட்டன. விரிந்தமேடையை உருவாக்குக சங்கங்கள் வைக்கக் கூடிய கோரிக் கைகள், ஒட்டுமொத்த உழைப் பாளி மக்களின் நலன்களோடு, கோரி க்கைகளோடு இணைந்திருக்கிறதா என்ற புரிதலை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. துறைகளை தாண்டி மத்திய அரசு ஊழியர் எனும் போது நம்முடைய பலம் பன்மடங்காக இருக்கும், இந்திய தொழிற்சங்க மையத்தின் அங்கம் எனும்போது பலம் இன்னும் பல மடங்கு இருக்கும். கிரா மப்புற விவசாயிகளை நம்முடைய சகோதரர்கள் என நினைக்கும் போது நம்முடைய பலம் பலமடங்கு கூடுத லாக மாறும். எனவே இதுபோன்ற விரிந்த மேடையை உருவாக்கவும், அதை பாதுகாக்கவும் மத்திய அரசு ஊழியர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
8 லட்சம் காலிப்பணியிடங்கள்
நம்முடைய கோரிக்கைகள் சமூகத் துடன் இணைந்த கோரிக்கைகளாக மாற வேண்டும். இன்றைய இளம் ஊழி யர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள் ளது. அரசுத் துறைகளில் காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படுவதில்லை. அர சின் புள்ளி விவரம் சிவில் எம்ளாயி மெண்ட் 40 லட்சம் பணியிடங்களில் 32 லட்சம் பேர்தான் பணியில் இருக்கி றார்கள் என்று கூறுகிறது. அந்த 8 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்ப டாமல் உள்ளன. 18 மாத கொரோனா கால அகவிலைப்படி முடக்கம் என்பது ஊதியத்தின் மீதான தாக்குதல். அவுட் சோர்சிங் என்ற பெயரில் அரசுத் துறை களின் பணிகள் தனியாரிடம் ஒப்படைக் கப்படுகிறது.
ஓய்வூதியம் மீதான தாக்குதல் ஏன்?
ஆயுள் இன்சூரன்ஸ் தாக்கப்படு வதற்கும் ஓய்வூதிய திட்டம் தாக்கப்படுவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ளவர்களின் சேமிப்பு கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. ஆயுள் இன்சூரன் சுக்கும், புதி ஓய்வூதியத்திற்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் இரண்டும் நீண்டகால முதலீடுகள். ஓய்வூதிய நிதி யத்திலே நீங்கள் பணம் செலுத்தினால் 30 ஆண்டுகளுக்கு சேமிக்கிறீர்கள். ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியில் 25 ஆண்டுகளுக்கு சேமிக்கிறீர்கள். உலகம் முழுவதும் நிதித்துறை மீதான கட்டுப்பாடு வேண்டும் என்று பன்னா ட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரு நிறுவனங்களும் விருபுகிற போக்கு தான் இந்த ஓய்வூதியத்தின் மீதான தாக் குதல், ஆயுள் இன்சூரன்ஸ் மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கமாடிட்டி மார்க்கெட் என்று கூறும் சரக்கு சந்தையிலும் நடை பெறுகிறது. சர்வதேச நீதி மூலதான சூதாட்ட விளையாட்டிற்கும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும், ஆயுள் இன்சூ ரன்ஸ் தாக்கப்படுவதற்கும் தொடர்பு உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதானியின் வழிப்பறி
18 மாத அகவிலைப்படியை முடக்கி யதன் மூலம் அரசு 38 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்திருக்கிறோம் என அரசு கூறுகிறது. சாதரண மக்களுக்கு இது மிகப்பெரிய தொகையாகத் தெரி யும். ஆனால் இந்திய பொருளா தாரத்தில் 38 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை இல்லை. அதானியின் சொத்து மதிப்பு வாரத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுகிறது. அதானியின் 4 வார லாபத்தை தான் அரசு ஊழியர்களிடம் பறித்தி ருக்கிறார்கள். அதானி எப்படி சம்பா திக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். அதானியின் நிறுவன பங்கு கள் 1,400 விழுக்காடு அதிகரித்துள்ளது. பங்குச் சந்தையில் சூதாட்டம் இல்லாமல் இது சாத்தியமாகுமா அவர் இவ்வளவு பணம் சம்பாதிக் கிறார் என்றால் யாரோ இழக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். யாரிடம் பறிக் கப்பட்டு இந்த பணம் அதானியின் கைக்கு போகிறது என்றால் உழைப் பாளி மக்களின் பணம்தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றார். துறைவாரி சங்கங்களை திரட்டி வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் அதுமட்டும் போதாது. அரசின் கொள்கைகளுக்கு எதிரான விரிந்த போராட்டமாக அது மாற வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது. எனவே விரிந்த மேடை அமைப்போம். அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட் டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு சுவாமிநாதன் பேசினார்.